தருமபுரி, டிச.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளராக ஏ.குமார் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 23 ஆவது மாநாடு டிசம்பர் 16,17 ஆகிய தேதிகளில் அரூர் என்.ஆர்.வி. மண்ட பத்தில் நடைபெற்றது. மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, வி.மாதன் மற்றும் ஆர்.மல்லிகா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நிறைவுறை யாற்றினார். முன்னதாக, இம்மாநாட்டில் மாவட்டச் செயலாளராக ஏ.குமார் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எம்.மாரி முத்து, எம்.முத்து, இரா.சிசு பாலன், சி.நாகராசன், வி. மாதன், சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், எஸ்.கிரை ஸாமேரி, ஆர்.மல்லிகா, ஆர். ஜோதிபாசு, ஆர்.சின்னசாமி, பி.ரவி ஆகியோரும், 41 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் புறம்போக்கு நிலங் களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இதேபோல் ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக விவ சாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு பெயர்களில் உள்ள நிலங் களை வகைமாற்றம் செய்து குடிமனைபட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும். தலித், பழங்குடி மக்களுக்கு எதி ராக நிகழ்த்தப்படும் வன் கொடுமைகளுக்கு முடிவு கட்டவேண்டும். தலித் மக்க ளின் வாழ்வாதார உரிமை களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன.