tamilnadu

img

தியாகிகள் வாட்டாகுடி இரணியன், ஆறுமுகம்

தியாகிகள் வாட்டாகுடி இரணியன்,  ஆறுமுகம் 

பட்டுக்கோட்டை ஒரத்தநாடு பகுதியில் ஜமீன் -இனாம் எதிர்ப்புப்போரில் ஈடுபட்ட வாட்டாக்குடி இரணியன் தலைக்கு ரூ.500 விலை அறிவிக்கப்பட்டது. அந்த வட்டாரத்தில் பல ‘போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட கம்யூனிஸ்ட் தலைவர். இவரை ஒழித்துக்கட்ட மிராசுதாரர்களும் போலீசும் திட்டமிட்டருந்தனர். சம்பவத்தன்று இரணியனைச் சந்தித்துப் பேசுவதற்காக தோழர் ஆறுமுகம் வடசேரிக்கு வந்தார். 1950 ஜூன் 5இல் வடசேரி சவுக்குத் தோப்பில் காவல்துறையினர் கட்டி வைத்து இருவரையும் சுட்டுக்கொன்றனர். மரணத்தைக் கண்டு துளியும் அஞ்சாமல் போலீசை எதிர்த்து இருவரும் சிம்ம கர்ஜனை புரிந்தனர். மரணத்திற்கு அஞ்சாத அவ்விருவரின் மரணம் கண்டு போலீஸ்காரர்கள் அஞ்சி, நடுநடுங்கி தலைகுனிந்தனர்.