tamilnadu

img

நினைவுகள் அழிவதில்லை

தோழர் பி.ஆர்.பர மேஸ்வரன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்  தான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராக, மாநிலக்குழு, மாநில செயற்குழு, மத்தியக்குழு உறுப்பினராக பணியாற்றியவர். ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் அனைத்திற்கும் பெருமை சேர்த்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தத்துவ ஏடான ‘மார்க்சிஸ்ட்’ ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றி ஏராளமான கட்டு ரைகளை எழுதியவர். மார்க்சிய லெனினியத்தை அனைவருக் கும் புரியும் வகையில் பல நூறு வகுப்புகள் எடுத்த ஆசிரியர். ‘நினைவுகள் அழிவதில்லை’ உட்பட ஏராளமான நூல்களை மொழி பெயர்த்தவர். கப்பற்படை  எழுச்சி உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.  சென்னை மாநகரில் கட்சி யையும், தொழிற்சங்கத்தையும் வளர்க்க அரும்பணியாற்றியவர். அவரது நினைவு நாளில் அவ ரது பெரும் பணியினை தொடர உறுதியேற்போம்!

இன்று தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நாள்