பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) அமைந்துள்ள மெரீனா மால் வணிக வளாகத்தில் வசந்த காலத்தையும் கோடை காலத்தையும் வரவேற்கும் வகையில் பிரம்மாண்டமான வண்ணத்துப்பூச்சிகள் துணி மற்றும் ஒயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அழகான தோட்டம் 15 அடி உயரத்தில் பனியால் ஆன உலக உருண்டை ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக வணிக வளாக தலைமை வர்த்தக அதிகாரி முகம்மது வாசிப் தெரிவித்துள்ளார்.