tamilnadu

img

எழுச்சிப் பேரணியுடன் சிஐடியு மாநாடு நிறைவு

தொழிலாளர் கோரிக்கைகளுக்காக நடைபயணம் சிஐடியு மாநில மாநாடு அறைகூவல்

10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் தழுவிய நடைபயணம் மேற்கொள்வது என சிஐடியு மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐசிடிஎஸ், ஆஷா ஊழியர்கள், அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்; தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்;  நலவாரிய பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும்; நலவாரியங்களில் உள்ள பாகுபாடுகளை களைந்து  அனைத்து நல வாரிய உறுப்பினர்களுக்கும் பி.எப். பிடித்தம் செய்ய வேண்டும்; மாதாந்திர ஓய்வூதியத்தை  ரூ.5 ஆயிரம் ஆக அதிகரிக்க வேண்டும்; போக்குவரத்து, மின்சார திருத்த சட்டங்களை ஒன்றிய  அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் தழுவிய  நடைபயணம் மேற்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களைத்தேடி மருத்துவம் ஆஷா ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கோரிக்கை மாநாடு  நடத்துவது, அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என மாநாடு முடிவு செய்தது. மாநகராட்சிகளில் அயல்பணி (அவுட்சோர்ஸ்) மூலம் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 22-ஆம் தேதி தமிழகத்தில் சக்திமிக்க இயக்கத்தை நடத்துவது எனவும்,  தூய்மைப் பணியாளர்களையும் தூய்மை காவலர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; போக்கு வரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்தக் கோரியும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிடக் கோரியும் பட்டாசு தொழிலை பாதுகாப்பது குறித்தும் தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிட வலியுறுத்தியும் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி, நவ.6- கன்னியாகுமரியில் நடைபெற்று  வந்த சிஐடியு மாநில மாநாடு,  நாகர்கோவிலில் பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு செம்படைப் பேரணியுடன் நிறைவு பெற்றது. கன்னியாகுமரியில் நவம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் இந்திய  தொழிற்சங்க மையத்தின் தமிழ்மாநில 15-ஆவது மாநாடு நடை பெற்றது. 3-ஆவது நாளான ஞாயி றன்றும் பிரதிநிதிகள் விவாதம் தொடர்ந்தது. பின்னர் நிர்வாகிகளும் மாநிலக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.  அ.சவுந்தரராசன் மாநிலத் தலைவராகவும், ஜி.சுகுமாறன் மாநிலப் பொதுச்செயலாளராகவும், மாலதி சிட்டிபாபு மாநிலப் பொரு ளாளராகவும் தேர்வு செய்யப்பட்ட னர். உதவி பொதுச் செயலாளர்  களாக வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன், கே.ஆறுமுக நயி னார் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

துணைத் தலைவர்களாக ஆர்.சிங்காரவேலு, கே.விஜயன், எம்.சந்திரன், கே.ஆர்.கணேசன், டி.உதயகுமார், பி.கருப்பையன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, இ.பொன்முடி, ஆர்.தெய்வராஜ், பி.சிங்காரன், ஏ.ஜானகிராமன், எம்.மகாலட்சுமி, எஸ்.கே.மகேந்திரன், டி.டெய்சி, ஆர்.எஸ்.செண்பகம், எஸ்.ரங்க ராஜன், எம்.ஐடா ஹெலன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர்களாக இ.முத்துக்குமார், ஆர்.ரசல்,  கே.தங்கமோகனன், சி.திரு வேட்டை, சி.ஜெயபால், எஸ்.ராஜேந்திரன், கே.சி.கோபிகுமார், கே.ரங்கராஜ், பா.பாலகிருஷ்ணன், சி.நாகராசன், பி.என்.தேவா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.தனலட்சுமி, டி.குமார், எம்.சிவாஜி, ஏ.ஸ்ரீதர், தேவமணி ஆகியோர் உட்பட 141 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.   நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் உரையாற்றினார்.  எழுச்சிப் பேரணி அதைத்தொடர்ந்து நாகர்கோ வில் வெட்டூர்ணிமடத்திலிருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்ற செஞ்சட்டை அணிவகுப்பும், நாகராஜா திடலில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.