மயிலாடுதுறை, டிச.31- மயிலாடுதுறையில் பொங்கல் பண்டிகையையொட்டி கால்நடை களை அலங்கரிக்கும் பாரம்பரிய நெட்டி மாலைகளை உற்பத்தி செய்யும் தொழி லாளர்கள் 3 நாள் விற்பனைக்காக 3 மாத உழைப்பை செலுத்தி வருவதாகவும், நலிந்து வரும் நெட்டி தொழிலை ஊக்குவிக்க மானியத்துடன் கடன் வழங்கி உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையில் உழவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கும் ஆடு, மாடு களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் 2-ஆம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆடு, மாடுகளை குளிப் பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெட்டி மாலை, நெற்கதிர் மாலை ஆகிய வற்றை அணிவித்து அலங்காரம் செய்து பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம். இவ்விழாவில் ஆடு, மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலை களே. இந்த நெட்டி மாலைகள் தமி ழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடிசை தொழிலாக செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் நீர்நிலைகளில் கிடைக்கும் நெட்டி செடி, தாழமரத்தி லிருந்து தாழமோந்தை அழிந்ததால் நெட்டி மாலைகள் தயாரிப்பு தொழில் குறைந்துவிட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நெட்டி மாலை தொழிலை செய்து வந்தனர். நெட்டி செடிகள் அழிந்ததால் தற்போது மூங்கில்தோட்டம், நல்லத்துக்குடி, கொள்ளிடம், மேலவல்லம் உள்ளிட்ட சில கிராமங்களில் மட்டுமே ஓரிரு குடும்பத்தினரே நெட்டிமாலை தொழிலை செய்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே மூங்கில் தோட்டம் கிராமத்தில் சிவானந்தம் என்பவரது குடும்பத்தினர் 3 தலை முறைகளாக நெட்டி மாலை தொழி லில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நெட்டி மாலை தயாரிப்பு பணியில் கடந்த மூன்று மாதங்களாக மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அண்டை மாநிலமான பாண்டிச் சேரிக்கு சென்று கண்மாய் ஓரங்களில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு விளையக் கூடிய நெட்டி செடிகள் காரைக்காலி ருந்து தாழமோந்தை, கும்பகோணத்தி லிருந்து பட்டுச் சாயம் ஆகியவற்றை வாங்கி வந்து நெட்டி மாலைகளை தயார் செய்கின்றனர்.
3 மாதங்கள் தயாரிக்கப்படும் நெட்டி மாலைகள் பொங்கல் நெருக்கத்தில் 2 நாள் மட்டுமே விற்பனை செய்யப்படு கிறது. இப்பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் குடும்பத்தினர் இதற்கு ஆகக்கூடிய செலவு முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாகவும் ஆடு களுக்கு போடும் ஒற்றை மாலை 15 ரூபாய், மாடுகளுக்கு போடும் இரட்டை மாலை 20 ரூபாய் என்று விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். கடைகளில் இந்த நெட்டி மாலைகள் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
நெட்டி மாலைகள் உற்பத்தி குறைவால் நெகிழி மாலைகள் விற்பனை செய்யப்படு கின்றன. ஆனாலும் நெட்டி மாலை களையே பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். நெகிழி மாலைகளை கால்நடைகள் தின்றால் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் நெட்டி மாலைகளை கால்நடைகள் தின்றாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதால் நெட்டி மாலை மவுசு குறையாமல் உள்ளதாக வும் ஆடு, மாடுகளை குலதெய்வமாக வணங்குவதால் நெட்டி தொழிலை விடா மல் செய்து வருவதாக சிவானந்தம் குடும்பத்தினர் கூறுகின்றனர். பொதுமக்கள் நெகிழி மாலைகளை தவிர்த்து பாரம்பரிய நெட்டி மாலை களை பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு நெட்டி தொழில் செய்ய மானியத்துடன் கடனுதவி தந்து தொழில் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர்.