tamilnadu

img

மண்சரிவால் மலை ரயில் சேவை ரத்து

மண்சரிவால் மலை ரயில் சேவை ரத்து

உதகை, அக்.19- ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள தால், மலை ரயில் சேவை தற்காலிமாக ரத்து  செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதி களிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்புப்பணி களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோத்தகிரி யில் 137 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கன மழை காரணமாக கெத்தை மலைப்பாதை யில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மேட்டுப் பாளையம் - மஞ்சூர் இடையே போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது. குன்னூர் - கோத்த கிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் அங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. மேலும், ஹில்குரோவ் - அடர்லி இடை யேயான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ள தால், வழக்கமான மலை ரயில் சேவை மற்றும்  விடுமுறைக்கால சிறப்பு மலை ரயில் சேவை  ஞாயிறன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.