tamilnadu

img

மணிமுத்தாறு அணை திறப்பு

நெல்லை,பிப்.6- சுமார் 2 வருடங்களுக்கு பிறகு மணி முத்தாறு அருவியில் குளிக்க அனுமதி கிடைத்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் குளித்தனர். நெல்லை மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குவது மணிமுத்தாறு அருவி. இங்கு செல்வதற்கும், அருவியில் குளிக்கவும் வனத்துறையின் அனுமதி அவசியம். கடந்த 2020 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவி பகுதி சேதமடைந்தது. மேலும் கொரோனா தொற்று பரவலும் அதி கரிக்க தொடங்கியதால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை யால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பிப்.6 முதல் அனுமதி வழங்கப் ்பட்டுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பொது மக்கள் குளிக்கலாம். மாலை 5 மணிக்குள் அருவிக்கு சென்றவர்கள் திரும்பி விட வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கை களை முறையாக கண்டுபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.