tamilnadu

img

மலைக்க வைக்க மாமல்லபுரம்!

சதுரங்கம் (Chess) 1500 ஆண்டுகள் வர லாற்றைக் கொண்ட விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த  சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந் தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையிலும் பல வேறுபாடுகளுடன் பரவியது. மங்கோலியா  வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இந்த விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றி லும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டில் செஸ் இங்கிலாந்தை எட்டியது.  15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன் பாட்டுக்கு வந்தன. “போன்”கள் (வீரர்) முதல் நகர்த்தலின் போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, “பிஷப்” திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழி யாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழி யாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப் பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக் கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என “இராணி”க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு “இராணி” ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. மேற்படி மாற்றங்கள் செஸ்ஸை கூடுதலாகப் பகுப் பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடு பாடுள்ள செஸ் ஆர்வலர்களை உருவாக்கியது. அந்தக் காலம் தொட்டு ஐரோப்பாவில் செஸ் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது.   44- ஆவது  ஆண்டு செஸ் ஒலிம்பியாட் மாஸ்கோவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் உக்ரைன் - ரஷ்யா  போரால் போட்டிகளை சென்னையில் நடத்த சர்வதேச செஸ்  கூட்டமைப்பு அனுமதி வழங்கியது.

தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு  இணைந்து 44- ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் தொடரை  வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடத்துகிறது.. இந்தப் போட்டி ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2013-ஆம் ஆண்டு  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு மிகப்பெரிய செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். “செஸ் ஒலிம்பியாட் 2022” போட்டிக்கான சின்னம்  ‘செஸ்  தம்பி’ என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல சின்னம் அமைந்துள்ளது. இந்தச் சின்னம் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பிடித்துள்ளது. இந்தச் சூழலில் கோயம்புத்தூர் மணியகாரம்பாளையத்தில் அமைந்துள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள் செஸ் சின்னத்தை 40 அடிஉயரம் 20 அடி அகலத்தில் வண்ண வண்ண உப்பைக் கொண்டு வரைந்துள்ளனர். நாற்பது மாணவர்கள் இணைந்து இரண்டு மணி நேரத்தில் இந்தச் சின்னத்தை வரைந்து அசத்தியுள்ளனர். தமிழகத்தில் சர்வதேச செஸ்போட்டி நடைபெறுவது பெருமையளிப்பதாகவும், இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தச்  சின்னத்தை வரைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF), தமிழ்நாடு அரசுடன் இணைந்து,  போட்டிக்குத் தயாராகி வருகிறது. போட்டி அமைப்பாளர்கள் நேரத்திற்கு எதிராக ஓடிக்கொண்டி ருக்கிறார்கள். காலம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்து விடுவோம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் இடங்களுக்கான பொறுப்பாளளும் (ஏஐசிஎஃப்) மற்றும் மேல்முறையீட்டுக் குழுவின் உறுப் பினருமான ஆர்.ஆனந்தராம்,  கூறுகையில், “ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கும். அடுத்த போட்டிக்கான இடம்  (ஒலிம்பியாட் 2024),  ஏற்கனவே  முடிவு செய்யப்பட்டுவிட்டது. அது புடாபெஸ்ட்-டில் (ஹங்கேரி) நடைபெறுகிறது. ஆனால்  44-ஆவது ஒலிம்பியாட்டை நடத்துவதற்கு எங்களுக்கு வெறும் ஐந்து மாதங்களே கிடைத்தன. 2022-ஆம் ஆண்டு -இல், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, உலக செஸ் கூட்டமைப்பு மாஸ்கோவிலிருந்து நிகழ்வை மாற்ற முடிவு செய்தது, அந்த வாய்ப்பை தமிழகம் மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது என்றார். இரண்டு அரங்குகளில் ஒலிம்பியாட் நடத்தப்படுகிறது என்கிறார் விருதுநகர் மாவட்டம்  சிவகாசியைச் சேர்ந்த 73 வயது முதியவர். இரண்டு அரங்குகளிலும் வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விளக்குகள், தரைவிரிப்புகள் மற்றும் மேசைகள் அமைக்கும் பணியை திட்டமிட்ட காலத்தில் முடித்துவிடுவோம் என்றார். ஆறு ஒலிம்பியாட் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்ற அனுபவமிக்க  அனந்தராம்,  சென்னை ஒலிம்பியாட் ஒரு சதுரங்கப் பிரியரின் கனவை நனவாக்கும். இதுவரை நடந்த போட்டிகளில் இல்லாத அனைத்து அம்சங்கம் 44-ஆவது ஒலிம்பியாட்டில் உள்ளது என்றார். 

ஒரு விளையாட்டு மென்மேலும் வளர அதன் வேர் வலுவாக இருக்க வேண்டும் என்கிறார்  ஒலிம்பியாட் துணைத் தலைமை நடுவரும், ஏற்பாட்டுக் குழு உறுப்பினருமான கோப குமார். போட்டி ஏற்பாடுகள் தொடங்கிய நாளிலிருந்து  தமிழக அரசு சிறப்பான ஒத்துழைப்பை நல்கிவருவதிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது என்றார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் (தமிழ்நாட்டைத் தவிர) மூன்று வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மற்றும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள்  இந்தப் போட்டியைக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். போட்டி நேரலை செய்யப்படு கிறது. இது செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தை களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.  எனவே இதற்கான பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. 24 மணி நேரமும் பணியாற்றி  வருகிறோம். தமிழக அரசின் ஆதரவுடன் போட்டிகள் வெற்றி கரமாக நடந்து முடியும் என்றார் கோபகுமார். சோதனை ஓட்டமாக, ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் விரைவான ஃபைடு (FIDE) தரவரிசைப் போட்டிகள் நடைபெறு கிறது. “கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் அங்கு இருப்பார்கள், அங்கு 1,400 வீரர்கள் காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை விளையாடுவார்கள், பரிசுத் தொகை ரூ. 5 லட்சம் என்றும் கூறினார் கோபகுமார். இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரும்  நான்கு ஒலிம்பியாட்களில் பங்கேற்று 2000 மற்றும் 2002-ஆம் ஆண்டில் தனிநபர் வெள்ளிப் பதக்கங்களை வென்ற எஸ்.விஜயலட்சுமி கூறுகையில், ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் எந்த விளை யாட்டிலும் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களைப் பார்க்க முடியாது. ஆனால் செஸ் விளையாட்டில் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பர். தமிழகத்தில் நடைபெறும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் மூலம் செஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது தான் மிகப்பெரிய அங்கீகாரம் என்றார்.