பமாகோ, பிப்.5- மாலியில் உள்ள பிரான்ஸ் ராணுவம் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரி வருகிறார்கள். மாலியின் தலைநகரான பமா கோவின் வீதிகள் போராட்டக்காரர்களால் நிறைந்து காணப்படுகின் ்றன.ஆயிரக்கணக்கான மக்கள் மாலியின் தேசியக் கொடியை ஏந்தியவாறு பிரான்ஸ் ராணுவமே வெளியேறு என்று முழக்கமிட்டவாறு வலம் வருகிறார்கள். தற்போது ள்ளஆட்சியாளர்களும் பிரான்ஸ் ராணுவம் தனது முகாம்களைக் காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.