tamilnadu

img

மகாத்மா காந்தி நினைவு தின உறுதி மொழி ஏற்பு

கும்பகோணம்,  ஜன.30 - மகாத்மா காந்தியின் 75  ஆம் ஆண்டு நினைவு தினத் தையொட்டி தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு  உள்ளிட்ட பல்வேறு அரசி யல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் சார்பில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கம் சார்பில் கும்பகோ ணம் உச்சி பிள்ளையார் கோ வில் அருகில் உள்ள காந்தி  சிலைக்கு மாலை அணி வித்து உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தமுஎகச கும்பகோணம் கிளை தலைவர் கலைச் செல்வன் தலைமையில், மாவட்ட தலைவர் சா.ஜீவபா ரதி, வட்ட செயலாளர் அசோக்குமார், ஓய்வூதியர் சங்க ராஜகோபாலன், துணைத்தலைவர் பழ.அன்பு மணி, வட்ட தலைவர் துரை ராஜ், வட்டச் செயலாளர் பக்கிரிசாமி,  சாலை போக்கு வரத்து ஊழியர்கள் சம்மே ளன மாநில செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொ டர்ந்து காந்தியின் வரலாற் றுச் சுவடுகளை வழங்கினார் கள். நாச்சியார்கோயில் கிளை தலைவர் சரவணன் தலைமையில் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப் பினர் லெனின் பாரதி, கிளை  செயலாளர் பார்த்திபன் மற்றும் நாடகக் கலை ஞர்கள், ஆட்டோ தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். திருபுவனம் கடைவீதியில் உள்ள காந்தி சிலைக்கு சங்க பொருளாளர் ஜவகர் தலைமையில் சிஐடியு நாகேந்திரன்சேகர், ஓய்வூ தியர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம்
பாபநாசத்தை அடுத்த பண்டாரவாடையில் மகாத்மா  காந்தியின் படத்திற்கு மாலை யணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாப நாசம் கிளைப் புரவலர் நவ நீதகிருஷ்ணன், உறுப்பினர் சிவசக்தி ராஜா, ஹிருத்திக் பாலன், ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சிராப்பள்ளி
மகாத்மா காந்தி நினைவு  நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிறன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மலைக்கோட்டை பகுதி செய லாளர் ராமர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி தெப் பக்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள காந்தி சிலை க்கு மாநில குழு உறுப்பினர்  ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செய லாளர் ராஜா ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் ராஜா உறுதி மொழியை வாசிக்க, அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சி யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கரா ஜன், வெற்றிச்செல்வன், ரேணுகா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திடல் அருகில் உள்ள  காந்தி சிலைக்கு மாலை அணி வித்து உறுதிமொழி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை ஏற்றார். பின்னர் கூட்டணி கட்சி தலைவர்கள் மகாத்மா  காந்தியின் தியாகத்தைப் போற்றும் வகையில் புக ழஞ்சலி உரையாற்றிர்னர். மதச்சார்பின்மையை போற் றும் வகையிலும் மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட  செயலாளர் ப.சுபாஷ் சந்திர போஸ், சிறுபான்மையினர் நல குழு சார்பில் என்.எம். அபுபக்கர், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நாகை ஒருங்கிணைப்பாளர் கே. தங்கமணி, விதொச மாவட்ட செயலாளர் எம்.முருகை யன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.வேணு,  தமுஎகச மாவட்ட செயலா ளர் ஆதி.உதயக்குமார், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.வடிவேல், சிபிஎம்  நகரச் செயலாளர் க.வெங்க டேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.