tamilnadu

img

உதடுகளில் திருக்குறல் உள்ளத்தில் இந்திவெறி - சு.வெங்கடேசன் எம்.பி

ஐபிசி, ஐ.இ.ஏ உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றி மசோதாக்கள் தாக்கல் செய்த மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று இந்திய தண்டனை சட்டம் ( Indian Penal Code), இந்திய சாட்சிகள் சட்டம் (Indian Evidence Act), குற்ற நடைமுறை சட்டம் (Code of Criminal Procedure) ஆகியவற்றை மாற்றி, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா என இந்தியில் பெயர் மாற்றிய புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஐபிசி, ஐ.இ.ஏ உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றி மசோதாக்கள் தாக்கல் செய்த மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கூறியதாவது:
"இந்தியில் மசோதாக்களின் பெயர் நியாய சன்கிதா, சுரக்ச சன்கிதா, பாரதீய சாக்சிய... கடைசி நாளில் 512 பக்க மசோதாக்கள் அவசரமாக தாக்கல். இந்தியாவை இந்திமயமாக்கும் செயல்திட்டத்தின் வெறிகொண்ட முன்னெடுப்பு.
உதடுகளில் திருக்குறள்...பாரதி... உள்ளம் முழுக்க இந்திவெறி. பாஜகவின் உண்மை முகம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.