tamilnadu

img

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி: முதல்வர் இரங்கல்

மதுரை, ஏப்.16- மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது வைகை ஆற்றின் கரை அருகே திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனு மதித்தனர். இதில் இருவர் உயிரிழந்த னர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களில் ஒருவர் உத்தமபாளையம் கோகிலா புரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் செல்வம் (47) என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு சந்திரா என்ற மனைவியும் ஹர்சினி என்ற மகளும், அபிக்சரன் என்ற மகனும் உள்ளனர். மற்றொருவர் மதுரை நாககன்னி கோவில் தெருவைச் சேர்ந்த பூவலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (62) என்பது தெரியவந்துள்ளது.

இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளன. இவரது கணவர் பூவ லிங்கம் ஏற்கனவே இறந்துவிட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை அமைச்சர்கள் பெ.மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன், மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆட்சியர் அனீஷ்சேகர், காவல் ஆணையர் செந்தில்குமார், மருத்துவ மனை டீன் ரத்தினவேல் மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா. கணேசன்  ஆகியோர் ஆறுதல் கூறினர். அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை முதன்மை யரிடம் கேட்டறிந்தனர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோ ரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அத்துடன் உயிரிழந்த இரண்டு பேருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக தலா ரூ.5 லட்சம் வழங் கும்படி அவர் உத்தரவிட்டு உள்ளார். படுகாயமடைந்த ஒருவ ருக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்த ஏழு பேருக்கு தலா ரூ.1  லட்சமும் வழங்கவும் அவர் உத்தர விட்டு உள்ளார்.