tamilnadu

img

சிபிஎம் மாநாடு களை கட்டியது மதுரை

சிபிஎம் மாநாடு களை  கட்டியது மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 அன்று மதுரையில் பேரெழுச்சியுடன் துவங்க உள்ளது. இதையொட்டி மாநாட்டு வரவேற்புக்குழு முழு வீச்சில் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மதுரை மாநகர் முழுவதும் செங்கொடி தோரணங்கள் பளிச்சிடுகின்றன. மாநாடு நடைபெற உள்ள தமுக்கம் மைதானத்தின் நுழைவாயில் முகப்பில், மதுரையின் அடையாளமான யானைமலையின் தோற்றத்தில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உருவங்கள் பதிக்கப்பட்டுள்ள காட்சி அனைவரையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. மாநாட்டில் கொடியேற்றப்பட உள்ள 24 அடி கொடிக் கம்பம் தயாராகி வருகிறது.