tamilnadu

img

ஆளுநரின் அதிகப்பிரசங்கித்தனம்

கோவை, ஜூன் 16- தமிழ்நாட்டின் முதல்வராக மக்கள் தேர்ந்தெடுத்தது மு.க.ஸ்டாலி னைத்தான். ஆர்.என்.ரவியை அல்ல என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். கோவை வந்த அவர்விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு வரலாற்றிலேயே இரக்கமற்ற, மூர்க்கத்தன மான, தான்தோன்றித்தனமான ஒரு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற பெயரிலே இங்கு வந்து ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார். முதல்வருக்கு தான் யாரை எந்த இலாகாவில் அமைச்சராக்குவது என்ற அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுத்ததை ஆளுநர்  ஏற்காதது, அதிகப்பிரசங்கிதன மானது மட்டுமல்ல, அயோக்கியத் தனமானது. தமிழ்நாட்டில் ஆட்சியை சீர்குலைக்க எந்தளவிற்கு முடியுமோ  அந்தளவிற்கு, ஒன்றிய பாஜக  அரசின் உளவாளியாக, ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார். சட்டத்திற்கு விரோத மாக, அவர் வகிக்கும் பொறுப்பிற்கு விரோதமாக பேசிக்கொண்டி ருக்கிறார். தமிழ்நாடு முதல்வராக மக்கள் தேர்ந்தெடுத்தது மு.க.ஸ்டாலி னைத்தானே தவிர, ஆர்.என் ரவியை அல்ல. அவர் ஒரு ஒன்றிய அரசின் ஊழியர்; முதல்வர் அல்ல.  ஒன்றிய அரசின் வேலைக்காரர் என்பதை ஆளுநர் மறந்துவிடக் சுடாது.  ஜனநாயகத்திற்கு எதிராக  செயல்பட்டு, இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்று ஒன்றிய பாஜக  அரசு நினைக்கிறது. ஜனநாயகத் திற்கு எதிரான ஒரு சர்வாதி காரத்தை நரேந்திர மோடி அரசு  நிலைநாட்ட நினைக்கிறது. அதில், தோற்றுப்போவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.