கரூர், நவ.19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டச் செயலாள ராக மா.ஜோதிபாசு தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு கரூர் ஜி.ஆர். திருமண மண்டபத்தில் நவ.18,19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஜீவானந்தம், பி.ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினர் என்.வெண்மணி ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு வேலை அறிக்கையை யும், ஜி.ஜீவானந்தம் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா நிறைவுரையாற்றினார். புதிய மாவட்டக்குழு தேர்வு மாநாட்டில் 31 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செய லாளராக மா.ஜோதிபாசு தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக ஜி.ஜீவானந்தம், பி.ராஜூ, கே.சக்திவேல், சி.முரு கேசன், இரா.முத்துச்செல்வன், பி.ராமமூர்த்தி, சி.ஆர்.ராஜா முகமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தீர்மானங்கள்
கரூரில் ஜவுளித் தொழிலை பாதுகாக்க, நூல் விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். நீதி மன்ற தீர்ப்பின் காரணமாக பாதி யிலேயே நிறுத்தப்பட்டுள்ள கரூர் பேருந்து நிலைய கட்டுமான பணியை உரிய அனுமதியைப் பெற்று தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும். கிருஷ்ணராயபுரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில் களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் உபரிநீராக செல்லும் நீரை மாய னூர் காவிரி ஆற்றில் இருந்து, குழாய்கள் மூலம் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளுக்கும் குளங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். தோகைமலை, க.பரமத்தி ஆகிய பகுதிகளை புதிய வட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரிலிருந்து பள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம் வழி யாக பழனிக்கு புதிய ரயில் பாதை யை அமைக்க ஒன்றிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலை காவிரி ஆற்றின் குறுக்கே மருதூரில் இருந்து திருச்சி மாவட்டம் உமையாள்புரம் வரை ரூ. 700 கோடியில் கதவணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோகைமலை, மைலம்பட்டி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளை யம், மண்மங்கலம் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனை களிலும் கட்டமைப்புகளை ஏற்படுத்தி மருத்துவர்களையும், பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். கடவூர் வட்டத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.