u குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்ட உத்தரவாதத்தை உறுதி செய்வது; இது விரிவான உற்பத்தி செலவை (C2 + 50 சதவீதம்) விட குறைந்தது ஒன்றரை மடங்கு இருக்கும்.
u குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்துதல் மற்றும் பரப்புதலை விரிவுபடுத்துதல்; குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும் பயிர்களின்
எண்ணிக்கையை அதிகரித்தல்; அனைத்து மாநிலங்களிலும் பயனுள்ள கொள்முதலை உறுதி செய்தல்; மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் ஏபிஎம்சி மண்டிகளின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்துதல்.
u கார்ப்பரேட் லாபியை கண்டிப்பாக ஒழுங்குபடுத்துவதன் மூலமும், அரசாங்க மானியங்களை அதிகரிப்பதன் மூலமும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், தண்ணீர் மற்றும் மின் சாரம் போன்ற விவசாய இடுபொருள் விலையை தீவிரமாக குறைப்பது.
u மூன்று ஆண்டுகளில் விவசாயத்தில் பொது முதலீட்டை இரட்டிப்பாக்குதல், நீர்ப்பாசனம் மற்றும் கிராமப்புற சந்தை உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துதல்; அனைத்து நீர்வள ஆதாரங்களிலும் ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மைக்கு கவனம் செலுத்துதல்.
u விவசாயத்திற்கு என மலிவான, சரியான நேரத்தில் மற்றும் போதுமான அளவிற்கு நிறுவன கடன் வழங்குவதை உறுதி செய்தல்; நிறுவனக் கடன் விவசாயத்தில் கார்ப்பரேட் நலன் களுக்கு திருப்பிவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சீர்திருத்த வழிகாட்டுதல்கள்; விவசாயத்திற்கான நேரடிக் கடனில் பெரும்பகுதிசிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய புதிய இலக்கை அறிமுகப் படுத்துவது.
u இந்தியாவில் கூட்டுறவுக் கடன் முறைக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்; கூட்டுறவு கடன் அமைப்புகள் ஜனநாயக முறைப்படி செயல்படுவதை உறுதி செய்து வழக்கமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
u உரங்களில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய முறையை ரத்து செய்ய வேண்டும்; விவசாயத்திற்கான மானியங்களை அதிகரித்தல்; தரமான வேளாண் இடுபொருட்கள் நியாய
மான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய உர விலைக் கட்டுப்பாட்டை மீண்டும் அமல்படுத்துதல்.
u விவசாயத்தில் பெரும் வணிக நிறுவனங்களுக்கு சாதகமான அறிவுசார் சொத்துரிமை நிர்வாகத்தில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவருதல்; விதை விலைகள், ராயல்டிகள், விதைகளை சேமிப்பதற்கான விவசாயிகளின் உரிமை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் தனியார் விவசாய ஆராய்ச்சியில் கடுமையான ஒழுங்குமுறையை உறுதி செய்தல்.
u இந்திய-ஆசிய தாராள வர்த்தக உடன்பாடு, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தாராள வர்த்தக உடன்பாடு போன்ற சமத்துவமற்ற மற்றும் சுரண்டல் மிக்க பலதரப்பு மற்றும் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய
வேண்டும்; அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் இந்தியாவின் பொருளாதார இறையாண்மை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியை பாதுகாக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.\
விவசாயிகள்
n கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து சிறு, நடுத்தர மற்றும் துயரத்திலுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு கடன் தள்ளுபடி மற்றும் கடனிலிருந்து முழுமையான சுதந்திரத்தை உறுதி செய்தல், கந்துவட்டிக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய நிறுவன வகைப்பட்ட மற்றும் தனியார் கடன்களை ஈடுகட்டுதல்.
n அனைத்து விவசாயிகளுக்கும் அனைவருக்கும் விரிவான, பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துதல், அதன் வடிவமைப்பில் மாநிலங்களுக்கே உரிய நெகிழ்வுத்தன்மையை அனுமதிப்பது; காப்பீடு மகசூல் அபாயங்கள் மற்றும் விலை அபாயங்களை உள்ளடக்கியது என்பதை உறுதிப்படுத்துவது; ஒவ்வொரு கிராமத்திலும் வானிலை கண்காணிப்பு நிலையங்களை நிறுவுதல்; பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பொதுத்துறை காப்பீட்டு நிறு
வனங்களின் பங்கை விரிவுபடுத்துதல்; விலை இடர்பாடுகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக விலை நிலைப்படுத்தல் நிதியமொன்றை உருவாக்குதல்.
n சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான மாதாந்திர ஓய்வூதியத்திற்கான சட்ட உத்தரவாதத்தை உறுதி செய்வது.
n விவசாய உற்பத்தி, கடன் வழங்கல், பால்பண்ணை, நீர் பயன் பாடு, இடுபொருள் கொள்முதல், பயிர் சேமிப்பு, பதனிடுதல், பெறுமதி சேர்த்தல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கான கூட்டு
றவு அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்; பல மாநில கூட்டுறவு அமைப்புகளுக்கு வெளியே உள்ள கூட்டுறவு அமைப்புகள் மாநில அரசுகளின் கீழ் செயல்படுவதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும்.
n விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தியில் பிற மகளிர் கூட்டுறவு அமைப்புகளை நிறுவு
வதை ஊக்குவித்தல்; இந்த கூட்டுறவு சங்கங்கள் தனியார் கார்ப்பரேட் கையகப்படுத்தலில் இருந்து விலக்கு பெற்றவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
n விலங்குத் தீவனத்தின் உற்பத்தி, வழங்கல் மற்றும் சில்லறை விற்பனைக்கு போதுமான மானியங்கள் நீட்டிக்கப்படுவதை உறுதி செய்தல்; இடுபொருள் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து கால்நடை விவசாயிகளைபாதுகாக்க வேண்டும். அனைத்து நோய்களையும், அதேபோல் தொற்று
நோய்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவான கால்நடை காப்புறுதித் திட்டத்தை வடிவமைத்து அமுலாக்குதல்.
n மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளை கொண்டு வந்து, அவர்களுக்கு தொழிலாளர் மானியங்களை விரிவுபடுத்துதல்.
விவசாயத் தொழிலாளர்கள்
n விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பேரம் பேசும் உரிமை மற்றும் ஓய்வூதியம், விபத்து இழப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய மத்திய அரசின் நிதியுதவியுடன் விரிவான சட்டங்களை இயற்றுதல்.
n மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்ற உச்சவரம்பை நீக்கி, அதை 200 நாட்களாக
உயர்த்துதல்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் எந்த மாநிலத்திலும் குறைந்தபட்ச ஊதியமான ரூ.700-க்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.
n அனைத்து கிராமப்புற மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு நாளைக்கு ரூ.700 ஆக உயர்த்துவது.
n அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் வீட்டுவசதி, சுகாதார வசதிகள், குடிநீர், காயம் ஏற்பட்டால் மருத்துவ வசதிகள், முதலுதவி மற்றும் போக்குவரத்து போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை வழங்குதல்.
n புலம்பெயர்ந்த வேளாண் தொழிலாளர்களைப் பாதுகாக்க, ஒற்றைச் சாளர முறை மற்றும் நாடு தழுவிய தகுதியுடன் பரவலாக்கப்பட்ட முத்தரப்பு வாரியங்களுக்கு வழிவகை செய்தல்.
n எல்.ஏ.ஆர்.ஆர் சட்டம், 2013ன் கீழ் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இடமாற்றம் செய்தல் தொடர்பான அனைத்து நேர்வுகளிலும் முழு இழப்பீடு மற்றும் மறுகுடியமர்வு மற்றும் மறு
வாழ்வு பெறத் தகுதியுடையவர்கள் என நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரித்தல்.
n தலித் மற்றும் ஆதிவாசி விவசாயத் தொழிலாளர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாத்தல்; குறிப்பாக தலித் மற்றும் ஆதிவாசி குடியிருப்புகளின் விரிவான வளர்ச்சியை உறுதி செய்தல்.
n சாதி, இன, மத மற்றும் பாலின அடிப்படையிலான அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித் மற்றும் ஆதிவாசி விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க தனிச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வழிவகுத்தல்.
n அனைத்து விவசாய பணியிடங்களிலும் அரசு ஆதரவுடன் குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகள் காப்பக வசதிகளை வழங்குதல்.