சென்னை, ஆக. 23 - உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயித்து வெளி யிடப்பட்டுள்ள அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஆக. 23) ரிப்பன் மாளிகை வளாகத்தில், சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்கம் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: உள்ளாட்சி அமைப்புகளில் பணி யாற்றும் தற்காலிக ஊழியர் களுக்கான ஊதியத்தை நிர்ண யித்து ஜூன் 16 அன்று அரசாணை 36ஐ வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் இருந்ததை விட குறைவாக, அடிப்படை சம்பளம், பஞ்சப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு புள்ளிக்கு 6 ரூபாய் தொழிலாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடுக்கும். அதேசமயம் வீதி மன்றத்திலும் இந்தப் பிரச்சனையை எதிர் கொள்ளும். 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில்,ஒப்பந்த முறை ஒழிக்கப்படும், தொகுப் பூதியம், மதிப்பூதியம் பெறு வோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணி யாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். அனைத்து துறைகளிலும் கூடுத லாக ஒப்பந்த ஊழியர்கள் நிய மிக்கப்படுகின்றனர். காண்ட்ராக்ட் முறையே இல்லாத போக்குவரத்து துறையிலும் அதனை புகுத்து கின்றனர். இவற்றையெல்லாம் இணைத்து வலுவான போராட்டங் களை நடத்துவோம். வேலை நிறுத்ததை நோக்கி செல்வோம். முதலமைச்சர் தொழிற் சங்கங்களுடன் பேச வேண்டும். மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். சமூக ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணி யாற்றும் ஊழியர்களை அரசு கூடு தல் கருணையோடு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.