tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல்: தடுப்பூசி முகாம் ரத்து

சென்னை,பிப்.12- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை யொட்டி தடுப்பூசி முகாம் ரத்து செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழ மைன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. பொது மக்கள்  பலரும் முகாமை பயன்படுத்தி இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி வரு கின்றனர். மேலும், பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்திக் கொள்கின்றனர். இதற்கிடையே வரும் 19 ஆம் தேதி  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறு கிறது. ஆளும் கட்சி உள்பட பல்வேறு அரசி யல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் காரண மாக வரும் 19ஆம் தேதி நடைபெற இருந்த  தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.