தஞ்சாவூர், ஜன.15 - தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி கிரா மத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு, தை முதல் நாளில் பட்டியலின மக்கள் பொங்கல் வைக்க சாதி ஆதிக்கத்தினர் தடை விதித்திருந்தனர். இதனால் பட்டியலின மக்கள் வேறொரு நாளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வந்தனர். இந்த அவலநிலையை போக்கும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரான என்.வெங்கடாசலம், ஊர் பொதுமந்தையில் வைத்து தைத் திங்கள் முதல் நாளில் பட்டியலின மக்க ளோடு இணைந்து பொங்கல் வைத்தார். அன்று முதல் தைத் திங்கள் முதல் நாளில் பட்டியலின மக்கள் சாதி ஆதிக்க சக்தியினரின் எதிர்ப்பை புறந் தள்ளி மக்கள் தலைவர் என்.வெங்கடாசலத்தின் ஒத்துழைப்போடு பொங்கல் வைக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தியாகி என்.வெங்கடாசலம் மறைவுக்குப் பின் அவரது நினைவிடத்தில் இப்பகுதி பட்டியலின மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொங்கல் வைப்பதை ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் இதேபோல மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், தியாகி என்.வெங்கடாசலத்தின் மகனுமான என்.வி.கண்ணன் முன்னிலையில், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், ஒன்றியக் குழு தோழர் எஸ்.வியாகுலதாஸ், ஊர் பெரி யவர்கள் ரமணி, தாமஸ் எடிசன், அடைக்கலதாஸ், பாரதிராஜா மற்றும் இளைஞர்கள் என்.வெங்கடாசலம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.