சென்னை, ஜன. 1 - புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.148 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாக்கி யுள்ளது. கடந்த புத்தாண் டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் 6 கோடி ரூபாய் அளவிற்கு மதுவிற் பனை குறைந்துள்ளது. தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்கள் வந்தால் தமிழகத்தில் மது விற்பனை அதிகரிக்கும். அதிலும் சென்னை, புதுச் சேரி உள்ளிட்ட பகுதிக ளில் அதிகமாக மது விற் பனை ஆகும். டாஸ்மாக் கில் சராசரியாக, வார நாட்க ளில் 75 கோடி ரூபாய் வரை யிலும், வார இறுதி நாட்க ளில் ரூ.90 கோடி வரை விற்பனை இருக்கும். கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தாண்டு மது விற்பனை குறைந் துள்ளது. இந்த நிலையில், 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.148 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.