tamilnadu

img

வாழ்வும் மருத்துவமும் - டாக்டர் இடங்கர் பாவலன்

 மருத்துவமனை வருகிற எந்த  நோயாளியும் தனது நோய்மை யுற்ற காரணத்திற்காகவே வருவதில்லை. சில சமயங்களில் பெரும்பாலும் அவர்களுக்கு நோய் கூட இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவை ஏதோ ஒருவகையில் ஆறுதல். அது  மருத்துவமனைக்கு வந்து சென்றாலே சரியாகிவிடும் என்ற மனோபாவமாக மக்களிடம் வளர்ந்திருக்கிறது. தனக்கு வருகிற எல்லாத் துன்பங்களை யும் உடல் வாதையோடு இணைத்துப் பார்க்கப் பழகியிருக்கிறது மனம். யாரேனும் சுடு சொல் பேசிவிட்டாலே தனிமை கொள்வ தும், யாரேனும் காயப்படுத்திவிட்டால் உடல் அதிர்ந்து நடுக்கம் கொள்வதுமாக நோயுற் றத்தைப் போன்றதொரு வாகு எல்லோருக் கும் வந்துவிடுகிறது. உடல் வாதைகளுக்கு மட்டுமல்ல மன வேதனைகளுக்கும் உடல் ஆரோக்கியமிழந்த தோற்றம் கொள்ள வைத்துவிடுகிறது.

எத்தனையோ பேர் மருத்துவமனை வந்த  போதிலும் பத்து சதவீத பேருக்குத்தான் உண்மையில் மருத்துவம் தேவையாயிருக் கிறது. மீதமுள்ள பல பேருக்கு வீடுகளில் தனித்திருக்கும் வேளையில் யாருமற்ற தனிமையை போக்கிக் கொள்ளும்படியாக அவர்கள் எங்கேனும் சென்று அந்தத் துயரை ஆற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக அவர்களுக்கு கிடைத்த எளிதான தொரு வழி மருத்துவமனை செல்வது எல்லாத் துயரங்களுக்கும் தான் நோய்மை கண்டுவிட்டதைப் போல மனம்  தோற்றம் கொள்வதா லும் அந்தத் துயரம் தனிமை, விரக்தி, ஒதுக்கப்படுதல், அவமானம் என்கிற எல்லா வித பாதக விஷ யங்களும் பின்னால் இயங்கிக் கொண்டிருப்பதாலும் அவர்களுக்குத் தேவையானது யாரோ ஒருவரின் நெருக்கம், ஆறுதல் கொண்ட பேச்சு, கொஞ்சம் நீளுகிற உரை யாடல்கள், தான் இன்னும்கூட யாராலோ நேசிக்கப்படுகிறோம் என்கிற நம்பிக்கை.. அவ்வளவுதான். அதையெல்லாம் தரு மென்கிற பிடிமானத்தில் தான் மருத்து வரிடமே வருகிறார்கள். எப்போதும் ஒரு நோயாளிக்குத் தேவைப் படுவது மருந்துகளோ மாத்திரைகளோ அல்ல. எல்லாம் சரியாகிவிடும் என்கிற ஆறுதல், அன்பால் சிறு தொடுதல், அவ்வளவு தான். ஆனால் எதையும் இப்போது மருத்துவ மனையில் பெற முடிவதில்லை.

நோயாளிகள் பேசுவது குறைந்து ஏனை யோர் பேசுவது அதிகமாகிவிட்டது. அவர்கள் விரும்புவது நாம் கேட்பதை. அந்த விருப்பம் எவராலும் நிறைவேற்றப்படுவதில்லை. ஒரு  நோயாளிக்கும் மருத்துவருக்குமான உரை யாடல் வெகு சொற்ப நிமிடங்களாகிப் போய் விட்டன. அதற்குள் என்னென்ன மருந்துகள், மாத்திரைகள் என பட்டியளிடப்படுகிறதே தவிர நோயாளியின் நோய்மைக்குப் பின்பான மனோபாவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தூக்கம் வருவ தில்லை என்பது நோயல்ல, அதற்கான தீர்வு அவரது குழப்பத்திற்கான குடும்ப விவகாரங்களுக்குள் இருக்கிறது என்பது தெரிந்தாலே அதற்கு ரெஸ்டில் மாத்திரைகள் தேவைப்படாது. மனநல ஆலோசனை ஒன்றே போனாதாகிவிடுகிறது. இங்கு பேசுவதற்கும் கேட்பதற்கும் எவருக்கும் நேரமிருப்பதில்லை. நோயாளிகளைத் தொடர்ந்து பேச விடும் போது அவர்கள் தாமாகவே குணமாகிவருவதை ஃபிராய்டு அக்காலத்திலேயே கண்டு கொண்ட உண்மையை நாம் புரிந்து கொள்ள வெகுகாலம் பிடிக்கிறது. நுனிநாக்குவரை வந்து வெளியேற்றப்படாத வார்த்தைகளால் மூளை நிரம்பி வழிகிற போது வேறு போக்கிடமின்றி அது கோபமாய், எரிச்சலாய் துக்கமாய் அழுகையாய் வருகிறது. யாரெல்லாம் அவர்களிடம் கேட்பதற்கு காதுகளை கொடுக்கிறார்களோ அவர்கள் முன்னிலையில் குழந்தைகளைப் போல அவர்கள் அழுது கண்ணீர் வடிக்கிறார்கள். மனநல மருத்துவம் என்பது தனிப்பட்டதல்ல. எல்லா வகையான நோயாளிகளுக்கும் அது வழங்கப்பட வேண்டிய அடிப்படையான ஒன்று. அதுவொரு வரவேற்பறையைப் போல எல்லாருக்கும் அவசியமான ஒன்று. ஆனால் அதுதான் நோயாளிகளுக்கு அரிதாகவே கிடைக்கிறது.

ஒரு மனிதனுக்கு தேவையான அன்பும் ஆதரவும் கவனிப்பும் அக்கறையும் தேவையான நேரத்தில் கிடைத்துவிட்டால் எவரொருவரும் நோயாளியாக மாட்டார்கள் என்பது எனது தனிப்பட்டதொரு புரிதல். அதுவே, ஒருவர் நோயென்று மருத்துவமனை வரும் போது அன்பாலும் பெரும் நேசமிக்க கரங்களாலும் அவரை ஆற்றுப்படுத்தாத சிகிச்சையால் எத்தகைய மருந்து மாத்திரைகளாலும் அவர் குணமடைய மாட்டார் என்பதையும் நான் புரிந்தே வைத்திருக்கிறேன். மாத்திரை சீட்டை வெறுமனே எழுதிக் கொடுத்துவிட்டு ஒருவாரம் கழித்துவிட்டு வாருங்கள் என்று அனுப்புவதற்கும், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் சீக்கிரமாகவே குணமாகிவிடுவீர்கள் என்று நம்பிக்கை அளித்து வழியனுப்புவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்ட ஒருவரால்தான் சிறந்த மருத்துவராக முடியும்.