சென்னை,ஜன.28- ரயில்வே உதவி ஓட்டுநர் பணியிடங்க ளுக்கு காத்திருப்பு பட்டியலில் உள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாள ருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார், மாநிலச் செயலா ளர் எஸ். பாலா ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:- வடகிழக்கு ரயில்வேயிலிருந்து தென்னக ரயில்வே உதவி ஓட்டுநர் பணியில் நியமிக்கப்பட்ட 53 தேர்வாளர்களை திருப்பி அனுப்பி, தென்னக ரயில்வேயில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு அந்தப் பணியிடங்களை வழங்கக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னக ரயில்வே அலுவலகத்தில் சிபிஓ-வை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தோம்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும் இப்பிரச் சினை குறித்து ஏற்கனவே ரயில்வே அமைச்ச ருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையொட்டி வடகிழக்கு ரயில்வேயில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பரிந்துரையை கடும் எதிர்ப்புக்கு பின்னர் ரத்து செய்யப் பட்டது. தற்போது ரயில்வே தேர்வாணையம் சென்னை, 17 பேர் கொண்ட ஒரு தேர்ச்சி பட்டியலை ஜனவரி 25 அன்று வெளியிட்டு ள்ளது.
இதில் மின்னணுவியல் பிரிவில் 14 நபர்களும் இயந்திரவியல் பிரிவில் 3 நபர்களும் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே 53 ஆர்ஆர்பி கோரக்பூர் தேர்வாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டு, கடும் எதிர்ப்புக்கு பின்னர் அப்பரிந்துரையை தென்னக ரயில்வே திரும்ப பெற்றது. ஆனால், தற்போது காத்திருப்பு பட்டியலில் உள்ள அனைவருக்கும் தேர்ச்சி பட்டியல் வெளியிடாமல் 17 தேர்வாளர் கள் மட்டும் வெளிட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தாங்கள் உடனடியாக தலையீடு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள மீதமுள்ளவர்களுக்கும் தேர்ச்சி பட்டியல் மற்றும் பணி நியமன ஆணை வழங்குவதற் கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.