சென்னை,ஏப்.18- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், “உடல் உறுப்பு தானம், மகப்பேறு கால இறப்பு விகிதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை கள் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,“அதிமுக ஆட்சியின்போது மகப்பேறு காலத்தில் இறப்பு விகிதம் 54ஆக இருந்தது. அதனை இந்த அரசு தற்போது, 52 ஆக குறைந்திருக் கிறது. உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் சற்று சரிவை சந்தித்தது. தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடத்தை முறையே பிடித்துவிட்டது. மீண்டும் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மூளைச் சாவு அடைந்த 158 நபர்களிடம் இருந்து 553 உறுப்புகள் தானம் பெற்றுள் ளோம். எனவே, விரைவில் முதலிடத்தை பிடிப்போம்”என்றார்.
முதல்வரும்
நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் இருவரும் உடல்தானம் செய்வதாக மியாட் மருத்து வமனையில் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர்,“பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு உள்ளது. பல ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் வலுவான பொது சுகாதார கட்டமைப்பு, தனியான பொது சுகாதாரப் மருத்துவப்பணி யாளர்கள், திறமையான மனித வளங்கள், போதுமான கிராம,வட்டார மாவட்ட மற்றும் உயர் நிலை மருத்துவக் கல்லூரி யுடன் இணைந்த மருத்துவ நிலையங்களை மாநில அரசு உருவாக்கியுள்ளது”என்றார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தமிழ்நாடு அரசு, மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவு (நீட்) தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மருத்துவப் படிப்பிற்கான இடங்க ளில் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டுதான் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அறிக்கையின் அடிப்படையில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், மற்றும் ஓமியோபதி ஆகிய பட்டப் படிப்புகளில் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான மசோதா 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. இம்மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு ஆளு நருக்கு அனுப்பப்பட்டது. மீண்டும், 8.2.22 அன்றும் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளு நருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு, ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் மற்றும் உயர்க் கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் கருத்துக்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி யது. அதற்கு தேவையான விளக்கமும் கொடுக்கப்பட்டது. ஆனாலும், இந்த மசோதா ஒன்றிய அரசிடம் குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.