tamilnadu

img

ஆசிரியர்களின் அல்லல்களை அறிய... அரசுப்பள்ளிகளை பாதுகாக்க இதை வாசிப்போம் - ச.செல்லத்துரை, உடுமலை

அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு  நடைமுறை க்கு இந்திய நாட்டில் வருவதற்கு நடைபெற்ற போராட்டங் கள் ஏராளம். இந்திய நாட்டின் விடுதலை க்கு  பின் ஏழை அடித்தட்டு மக்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் கூடு தலாக உருவாகின.இந்திய நாட்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பட்ட பின் தமிழகத்தில் கல்வியின் வாசல்  அனைவருக்கும் திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக கல்விச் சிறந்த  தமிழ் நாடு என மாறுவதற்கு அடித்தளமாக ஆரம்பக் கல்வி அமைந்தது. கிராமங்கள்தோறும், நகர்ப்புறங்க ளிலும் ஆரம்ப பள்ளிகள் உருவாக்கப் பட்டன. இந்த பள்ளியில் ஏழை பணக் காரர் உயர்ந்த  வகுப்பினர்  ஒடுக்கப் பட்டவர்  என்ற வேறுபாடு இன்றி அனை வரும்  கற்கும் நிலை ஏற்பட்டது. எல்லோ ரும் கல்வி கற்று இன்புற்றார் என்னும் நிலையை நோக்கி  தமிழ்நாடு நகர்ந்தது.  கிராமங்களில் பள்ளிகளும் பள்ளிக ளில் பணியாற்றும் ஆசிரியர்களும் கிராம மக்களின் மதிப்புக்கு உரிய வர்களாக மதிக்கப்பட்ட காலம்  உருவா கியது. ஆனால் இந்த நிகழ்வு கடந்த 30 ஆண்டுகளில்  பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்பதை இதய நிலவனின்   “ஓரெண்டே ரெண்டே”  நாவல் பதிவு செய்திருக்கிறது.

கவிஞர், சிறுகதை எழுத்தா ளர்,குறும்பட இயக்குனர்,நாடக ஆசி ரியர்,  திரைக்கதை வசனகர்த்தா என்ற பன்முக தன்மை ஆளுமைகளை உடை யவர் நாவலாசிரியர் இதயநிலவன். நூறாண்டு பயணம் செய்த ஒரு அரசு ஆரம்பப்பள்ளி மூடப்படுவதை கண்டு  மனம் வெதும்பியதுடன் ஓராசிரி யர்,  இரண்டு  ஆசிரியர்கள் பணியாற் றும் அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆசி ரியர்கள் படும் அல்லல்களை அவஸ் தைகளை அற்புதமாக விவரித்து இந்த நாவலில் கொண்டு செல்லும்  பாங்கு நயமாக உள்ளது. ஆசிரியர் கவிதா. அவர்தான் நாவலின் கதாநாயகி. கிராமத்தில் தனியாக பணியாற்றும் ஒரு பெண்ணாசிரியருக்கு ஏற்படும் கிரா மத்தானின் இடைஞ்சலையும் நாவலா சிரியர் காட்டுவது எதார்த்தமாக இருக் கிறது. நாவலில் தொடக்கத்தில் இருந்து இன்றைய ஆரம்பக்  கல்வி குறித்த செய்திகளை  கோடிட்டுக் கொண்டு செல்கிறார். 42 மாணவர்கள் படித்த திரு வண்ணாமலை பள்ளியின் வகுப்பை நினைவு கூறுகிறார் கவிதா.  “அப்பப்பா ஒரு நாளைக்கு எவ்வ ளவு அந்த குழந்தையின் கொண்டாட் டங்கள். சண்டைகள்.கோரசாக பாடும் மனப்பாடப் பாடல்கள். வரிசையாக ஓர் இடம் விட்டு ஒரு இடம் நடந்து செல்லும் அழகு.பார்க்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்று கிராமப் பள்ளியை நினைந்து உருகுவது.  தான் வேலை பார்க்கும் காலத்தில் ஒரு பாரம்பரியமிக்க பள்ளி ஒன்று மூடப் பட்டு விட்டால் அந்த  கறையை எப்படி துடைத்து எடுப்பது, அது மூடப்படாமல் இருக்க எவ்வ ளவு போராட முடியுமோ அவ்வளவு போராட வேண்டும் என்று உறுதி எடுத்து பணிபுரியும் கவிதா, சொந்த வாழ்க்கை பிரச்சனைகளையும் அன்றாடம் நினை த்து வருந்தும் மனநிலையை  “இவள்  வாழ்க்கை பிரச்சனைகள் நிரம்பிய ஒரு அடர் வனமாக இருக்கிறது “என்று குறிப் பிடுவது நாவலாசிரியரின் கவித்துவ வரியாகும்.

“ஒரெண்டே ரெண்டே என்று வாய்ப் பாடு சொல்லி கணக்குகளை சுலபமாக சரி செய்யும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பல லட்சம் முறை இந்த ஒப்பித்தலை கேட்டிருந்தாலும் புதிதாய் வந்த குழந்தை தப்பும் தவறுமாக வாய்ப்பாடு சொல்ல அந்த குழந்தை சரியாக சொல்லும் வரை அதை சரி செய்து அந்த குழந்தை வாய்ப்பாட்டை சரியாக சொல்லி முடிக்கவும் மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றுமே அதற்கு ஈடாக நாம் எதையும் சொல்லிவிட முடியாது. நன்றாக கூறிவிட்டால் சக மாணவர்க ளை கைதட்டச் சொல்லி உற்சாகமூட்டு வார்கள் கவிதாவும் அப்படித்தான்” என்ற வரிகள், “ஈராசிரியர் பள்ளியில் பணியாற்றி னால் தான் அங்கே வேலை பார்க்கும் ஆசிரியர்களின் சிரமம் தெரியும். அல்லது அதைப்பற்றி ஆய்வு பூர்வ மாக சிந்தித்து பேசுபவர்களால் மட்டுமே ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் ஆசி ரியர்களை பற்றி புரிந்து கொள்ள முடியும். இப்படிச் சொல்லிக் கொடுக் கும் ஆசிரியர்கள் மன அளவில் சோர்ந்து விடுகிறார்கள்.அந்த சோர்வு அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற் படுத்தி விடுகிறது. அந்த மன அழுத்தம் பல வகை நோய்களையும் கொடுக்கி றது”  இன்றைய  கிராமங்களில்  உள்ள இரண்டு ஆசிரியர்கள் பணி புரியும் ஒற்றை இலக்க மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் பரிதாப நிலை யை நாவல் ஆசிரியர் மிக அருமை யாக சுட்டிக்காட்டுகிறார்.   இந்த நாவலில் வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மூலம் கிராமங்களில் கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியா தையை, ஆசிரியருடைய பணியையும் வெற்றியையும் பற்றி குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

“யார் பள்ளிக்குள் நுழையக்கூடாது என்று வரலாறு  தடுத்து நிறுத்தியதோ இன்று அதே பகுதியைச் சேர்ந்த குழந் தைகளால் கிராமப் பள்ளிகள் உயிர் வாழ்கின்றன. அவர்களால் தான்நமக்கு ஊதியம்,வீடு, வாசல், கார் என்ற மரியாதை யும்” என்று போகிற போக்கில் சமூக நீதி யையும் குறிப்பிடுகிறார்  நாவலாசிரியர்.  தமது சொந்த அனுபவங்களோடு கலந்து  நம்முடைய காலத்தில் அரசு பள்ளிகள் இத்தகைய நிலையை நோக்கி  நகருகின்றனவே. மக்களு டைய சிந்தனை மாற்றங்களும்  ஆங்கில மோகமும் அரசின் கொள்கை களும் என்ன செய்ய காத்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்த பள்ளிகள் எல்லாம் கிராமங்களில் இருக்குமா என்ற ஏக்கத்தோடு முடிக்கிறார்கவிஞர் இதயநிலவன். ஆசிரியர்கள் மட்டுமல்ல சமூகத்தில் அரசு பள்ளிகளை நேசிப்பவர்கள், அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்  இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டும்; கலந்து உரையாட வேண்டும்.

ஒரெண்டே... ரெண்டே.. நாவல் 
இதயநிலவன் 
 வெளியீடு:
 பாரதி புத்தகாலயம் சென்னை 
விலை: ரூ.170