tamilnadu

img

ஒரணியில் இருப்போம்; தமிழ்நாட்டின் உரிமை காப்போம்!

ஒரணியில் இருப்போம்; தமிழ்நாட்டின் உரிமை காப்போம்!

பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு

“ஒற்றுமையாக ஒரே அணியில்  இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளைப்  பாதுகாப்போம்” என்று சென்னையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர் களுக்கு மார்ச் 1 அன்று 72 வது பிறந்த  தினமாகும். இதையொட்டி, சென்னை  கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதா னத்தில் திமுக சார்பில் பிப்ரவரி 28 அன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான க. துரைமுருகன் தலைமை வகித்தார். இதில், கி. வீர மணி, கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ,  வைகோ எம்.பி., பெ. சண்முகம், இரா.  முத்தரசன், தொல். திருமாவளவன் எம்.பி., பேரா. காதர் மொய்தீன், பேரா.  எம்.எச். ஜவாஹிருல்லா, தி. வேல்முரு கன் எம்எல்ஏ, கருணாஸ் உள்ளிட்ட கூட்டணி மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்  டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். விழாவில் ஏற்புரையாக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு: இது வெற்றி விழா மேடை! இது பிறந்தநாள் விழா மேடை யைப் போல் இல்லை, வெற்றி விழா  மேடையைப் போல் இருக்கிறது! ஆமாம், இது வெற்றி விழா மேடை தான்! 2019-இல் இருந்து கொள்கைக் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வரும் நாம், 2026-இலும் அடைய  இருக்கும் வெற்றிக்குத் தொடக்க விழா  மேடை இது! என்னைச் சந்திப்ப வர்கள், ‘உங்கள் வெற்றிக்கு எது அடிப்படை?’ என்று கேட்டால், எங்க ளின் தோழமை உணர்வுதான் என்று அனைத்து இடத்திலும் மறக்காமல் பதிவு செய்பவன் நான்! ஏன், தமிழ்நாடு  சட்டமன்றத்திலேயே கூட பதிவு செய்தி ருக்கிறேன்!  விரிசல் விழாது ஊடக நண்பர்களுக்கும், எதிர்க் கட்சியினருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, கருத்தியல் கூட்  டணி அமைத்திருக்கும் எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால், 

ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்ற  ஒன்றிணைந்து செயல்படுவோம்!

முதல்வரின் பிறந்த நாள் விழாவில் பெ.சண்முகம் பேச்சு சென்னை, மார்ச் 1- “ஒன்றிய ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜகவை அகற்ற, தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலினுடன் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்படுவோம்!” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளியன்று (பிப்.28) கொட்டிவாக்கத்தில் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தி யக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.  இந்த பொதுக் கூட்டத்தில் பெ. சண் முகம் பேசியதாவது: “செயலால், சொல்லால் போற்றுதலுக்கு ரிய இடத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் அவர்கள் செயல்படுவார்.  மாநில அதிகாரங்கள் பறிப்பு, நிதி வழங்குவதில் பாரபட்சம், மொழித்திணிப்பு, தொகுதி பறிப்பு என ஒன்றிய பாஜக அரசு,  தமிழகத்தின் மீது மூர்க்கத்தனமான தாக்கு தல் தொடுத்துள்ளது. அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உள்ள இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிச குடியரசு என்ற கோட்பாடுகள் எதையும் ஏற்றுக் கொள் ளாத கூட்டம் தான், ஒன்றிய ஆட்சி அதி காரத்தில் உள்ளது.

இந்தியாவை இந்து நாடாக மாற்றத் துடிக்கிறது. சங்-பரிவார் கூட்டத்தின் நோக்கத்தை முறியடிக்க, அதிகாரத்தில் இருந்து அகற்ற தொடர்ந்து  இணைந்து செயல்படுவோம். தமிழகத்தில் ஏராளமான மக்கள் நலத்  திட்டங்களை முதலமைச்சர் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தி வரு கிறார். அவை அனைத்தும் நீண்ட கால பலனை விளைவிக்கக் கூடியவை. உழைப்பாளி மக்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் 4 தொழி லாளர் தொகுப்புகளை ஒன்றிய அரசு  உருவாக்கி உள்ளது. சிஐடியு, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றி ணைந்து கூட்டாக எதிர்ப்பு தெரிவிப்பதால் அவை அமல்படுத்தப்படாமல் உள்ளன. அந்த வகையில், தொழிலாளர் உரிமை களை பாதுகாப்பதிலும் தமிழக அரசு முக்கி யப் பங்காற்ற வேண்டும். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப் பட்டுள்ளது. எஞ்சிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு  மக்களிடத்தில் உள்ளது. 2021 தேர்தலை போன்று, 2026 தேர்தலிலும் சந்தேகத்திற்கு இடமின்றி மாபெரும் வெற்றிபெறுவதற்கு எஞ்சியிருக்கும் வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். முதல்வர் நலமுடன் வாழ  வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.