பெரம்பலூர் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர், ஜுன் 13- பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. பத்மநாபன் ஆலோசனையின் படி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வி. களத்தூர் கிராமத்தில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்தும் சட்ட எழுத்தறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான ஏ. சரண்யா தலைமையேற்று உரையாற்றினார். இம்முகாமில் பெரம்பலூர் தொழிலாளர் ஆய்வாளர் ராணி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி சரவணன், பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் பிரிவு உதவி ஆய்வாளர் மருதமுத்து, புகையிலை கட்டுப்பாடு திட்ட அலுவலர் டாக்டர். வனிதா ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மீரா பவுண்டேஷன் இயக்குநர் ராஜா முகமது செய்திருந்தார்.