பணம் தருகிறோம் என்று அமெரிக்கா ஆசை காட்டியதாக லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் சய்யித் ஹசன் நஸ்ரல்லா அம்பலப்படுத்தியுள்ளார். பாலஸ்தீனத் திற்கான ஆதரவைக் கைவிட வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுடனான மோதலை நிறுத்திவிட வேண்டும் என்றும் அமெரிக்கா பேரம் பேசியது என்பதை நஸ்ரல்லா வெளியுலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஈக்குவடாரில் இடைக்காலத் தேர்தல் பிப்ரவரி 2023ல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு மக்கள் வாக்களிப்பார் கள். ஆளும் கட்சியின் மக்கள் விரோதக் கொள்கைக ளுக்கு எதிராக மக்களின் ஆதரவைப் பெற இடதுசாரிக் கட்சிகள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வது என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை நிறுத்தியிருப்பது போன்று, சீனாவுக்கு எதிராக இந்திய-பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளை ஒன்று திரட்ட அமெரிக்கா முனைந்துள்ளது. ஆஸ்திரே லியாவுக்கு மூன்று நாட்கள் பயணத்தை அமெரிக்கா வின் வெளியுறவுத்துறை செயலாளர் பிளின்கென் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுற வுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பங்கேற்கவிருக்கிறார்.