tamilnadu

வளர்ச்சிப் பாதை வலுவடையட்டும்!

சென்னை, டிச. 31 - அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கட்டும் என்று அரசியல் கட்சித் தலை வர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இரா.முத்தரசன் (சிபிஐ): 2022ஆம் ஆண்டு மதச் சார்பற்ற, ஜனநாயக சக்தி கள் மேலும் வலிமை பெற்று நாட்டின் அதிகாரத்தில் நீடிக்கும் வகுப்புவாத மத வெறி சக்திகளையும், ஜாதி ஆதிக்க வெறித்தனத்தையும் முறியடித்து, நீடித்த அமைதிக்கு வழிகாணும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்போம் கே.எஸ்.அழகிரி (காங்கி ரஸ்): தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்து மக்கள் அரசின் நலன்சார்ந்த திட்டங்களினால் பெரும் பயனைடைந்து வருகிறார் கள்.

இதனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. வைகோ (மதிமுக): 2021 ஆம் ஆண்டு அரசிய லில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும். தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்றும், அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பும் புதிய விடி யலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெற  ஒத்துழைப்போம். சாதி, சமய  மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தமிழகத்தில் முழு மையாக நிலைநிறுத்தட்டும். விசிக தலைவர் தொல்.திருமா வளவன், திக தலை வர் கி.வீரமணி, உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.