tamilnadu

img

சட்டங்கள் ஆட்சி செய்தாலும், சமூகத்தை சமயம்தான் ஆள்கிறது

சென்னை, அக்.29- தமுஎகச தொடங்கியவர் களில் ஒருவரான சிகரம் ச.செந்  தில்நாதன் 81வது பிறந்த நாளை யொட்டி ‘சிகரம் ச.செந்தில்நாதன்:  பாதை - பயணம் - படைப்புல கம்’ நூல் வெளியீட்டு விழா வெள்ளி யன்று (அக்.29) சென்னையில் நடைபெற்றது. சந்தியா பதிப்ப கம் பதிப்பித்துள்ள இந்நூல் வெளியீட்டு விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலை ஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு நடத்தியது. இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய டாக்டர் நீதியரசர்  ஏ.கே.ராஜன், “இந்த நூலில் உள்ள அவரது நேர்காணலில் சில  தலைவர்களை பற்றி அச்சம்,  தயக்கமின்றி சரியான கருத்துக் களை தெரிவித்துள்ளார். இந் நூலை படித்தால் அவரின் பெரு மைகளை அறிந்து கொள்ள முடி யும்” என்றார்.

பாசிசக் கருத்துப் பரவலை தடுத்திடுக!

நூலை வெளியிட்டு பேசிய  நீதியரசர் கே.சந்துரு, “மக்கள் எழுத்தாளர் சங்கத்தை உரு வாக்கி செந்தில்நாதன் நடத்திய முதல் கூட்டம் அண்ணாசாலை மாவட்ட மைய நூலக அரங்கில் நடைபெற்றது. அப்போது அந்த அரங்கிற்கு வாடகை 10 ரூபாய்.  இப்போது அதை புதுப்பித்து 10  ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ண யித்துள்ளனர். பொதுவெளி அரங்குகள் தற்போது இலக்கிய நிகழ்வுகளுக்கு தருவதில்லை. கருத்துரிமை, எழுத்தாளர்களை  ஊக்குவிக்க வேண்டிய நேரத்  தில், நேரடியாக அல்லது பெருந்  தொகையை கட்டணமாக நிர்ண யித்து அனுமதி மறுக்கிறார்கள். பொது அரங்குகளில் கருத்து ரிமை பறிப்பதை எதிர்க்க வேண்  டும்” என்றார். “கருத்துரிமையை காக்க  வேண்டுமென்றால் நூலகங் களை பாதுகாக்க வேண்டும். நூல கங்களை தாக்குவது ஒரு பாசி சப் போக்கு. தமிழகத்தில் ஆட்சி  மாற்றம் ஏற்பட்டு நூலகங்க ளுக்கு புதிய நூல்கள் வாங்கப்படு கிறது. மதுரையில் பெரிய நூல கம் தொடங்கப்பட உள்ளது சிறப்  பானது. ஒரு அரசு நிகழ்ச்சியில்  முதலமைச்சருக்கு ‘அறியப் படாத கிறிஸ்தவம்’ என்ற நூலை  ஆட்சியர் தருகிறார். அதை வைத்து  பாஜக எதிர்ப்பு போராட்டம் நடத்தி யது. பன்முகத் தன்மை கொண்ட  சமுதாயத்தில், யார் எந்த புத்த கத்தை படிக்க வேண்டும் என்பது  மக்களின் விருப்பம்; அண்ணா மலையார் விருப்பம் அல்ல. இப்ப டிப்பட்ட பாசிசக் கருத்துக்களை பரவுவதை தடுக்க வேண்டும்.  நாட்டில் பன்முகத் தன்மை இருக்க  வேண்டுமென்றால், ஒரு மொழி,  ஒரு கட்சி, ஒரு தலைவர், ஒரு உணவு  என்பதையெல்லாம் மறுக்க வேண் டும்” என்றும் அவர் கூறினார்.

கலங்கரை விளக்கம்

நூலின் முதல்படியை பெற்  றுக் கொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசு கையில், “தொழிற்சங்கத்தில் அறிமுகமானபோது, தொழிலா ளர் வழக்கு தொடர்பாக தாம்  அணுகிய சில வழக்கறிஞர்களில் ஒருவர் செந்தில்நாதன். அன்  றைய காலக்கட்டத்தில் இடது சாரி வழக்கறிஞர்கள், ஈடுபட்டோ டும், வர்க்க வெறியோடும் வழக்கை  நடத்தினார்கள். சமூகப் பணி களுக்கு மத்தியிலும் வழக்கை செந்தில்நாதன் மிகச்சிறப்பாக நடத்துவார். இவரை போன்ற வர்கள் கொடுத்த இலவச சட்ட உதவிகள் எல்லாம் சேர்ந்துதான் இயக்கம் இன்றைய நிலையை எட்டியுள்ளது” என்றார். கா.சிவத்தம்பி எழுதுவதற்கு முன்பே தமிழ் சிற்றிலக்கியங் களை ஆய்வு செய்து செந்தில் நாதன் எழுதியுள்ளார். அது பதிப்  பிக்கப்பட்டிருந்தால், சிகரம் செந்  தில்நாதனுக்குதான் முதல் தமிழ் ஆய்வாளர் என்ற பெருமை கிடைத்திருக்கும் என்ற தகவல் நூலில் இடம்பெற்றுள்ளதை சுட்  டிக்காட்டிய அவர், “இலக்கிய  விமர்சனங்களை முகத்தாட் சண்யமின்றி செந்தில்நாதன் நேருக்கு நேர் செய்வார். தமிழை  பாதுகாப்பதில் முதல் வரிசையில் நிற்பவர். இடதுசாரி இயக்கத்  திற்கு மிகப்பெரிய பங்களிப்புச்  செய்து தூணாக, முன்னோடி யாக இருக்கிறார். எதிர்கால தலை முறைக்கு கலங்கரை விளக்க மாக திகழ்கிறார்” என்றும் பாராட்  டினார்.

எதிர்கால இயக்கத்திற்கு...

நீதியரசர் து.அரிபரந்தாமன்  வாழ்த்திப் பேசுகையில், “செந் தில்நாதனின் முதல் ஜூனியர் நான். அவரிடம் பயிற்சி பெற்ற நான், சுசித்ரா, கிறிஸ்டோபர் என 3 பேர் நீதிபதிகளாகிவிட்டோம்”  என்று உவகையோடு குறிப்பிட் டார். “காங்கிரஸ், திராவிட இயக் கத்தை விட இலக்கிய, பண்பாட்  டுத் தளத்தில் இடதுசாரிகள் கூடு தல் பலமுடன் உள்ளதையும், அது எதிர்கால வெகுஜன இயக்கத்  திற்கு பயன்படும் என்பதையும் இந்த நூலின் வாயிலாக கூறு கிறார். அரசியல் நிர்ணய சபை யில் நடைபெற்ற விவாதங்கள் குறித்த புத்தகம் ஒன்றையும் செந்  தில்நாதன் எழுதிக் கொண்டி ருக்கிறார்” என்றார்.

சாப்ட் கம்யூனிஸ்ட்

ஊடகவியலாளர் திரு.வீர பாண்டியன் தமது வாழ்த்துரை யில், “தமிழ் அமைப்புகளின் இயக்கங்கள், தமிழில் அர்ச்சனை என பல்வேறு இயக்கங்களில் செந்தில்நாதன் முன்னின்றதால்,  கலைஞர் கருணாநிதியால் ‘சாப்ட் கம்யூனிஸ்ட்’ என பாராட்  டப்பட்டார். எம்.எம்.இஸ்மாயில்,  நீதிபதி எஸ்.மகாராஜன், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை என நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தொடர்ந்து தமிழையும், இலக்கியத்தையும் காப்பாற்றி வந்துள்ளனர். அந்த சங்கிலியின் ஆவுடையார் கோவி லின் கனத்த சங்கிலியாக செந்தில்  நாதன் உள்ளார்” என்றார். வெரி ஷார்ப் கம்யூனிஸ்ட் “சாப்ட் கம்யூனிஸ்ட் போல்  தோற்றமளிக்கும் ‘வெரி ஷார்ப்’  கம்யூனிஸ்ட் செந்தில்நாதன். கூர் மையான பொதுவுடமைவாதி, தாயுள்ளமிக்க போராளி. உத்தி யோடு போராட, அனைவரை யும் ஈர்க்கும் தன்மை கொண்ட  போராளி. பொதுவுடமை இயக்  கத்திற்கு மட்டுமின்றி, தமிழுக் கம், தமிழ் பண்பாட்டிற்கும், பக்தி  இலக்கியத்தை பார்க்கும் புதிய  பார்வைக்கும் மகத்தான பங்க ளிப்பு செய்துள்ளார்” என்று மக் கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் புக ழாரம் சூட்டினார்.

மண் சார்ந்த மார்க்சியம்

ஏற்புரையாற்றிய சிகரம் ச. செந்தில்நாதன், “நாட்டை சட்டங்  கள் ஆட்சி செய்தாலும் கூட,  சமூகத்தை சமயம்தான் ஆளு கிறது. அந்த சமயத்தில் குறுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்தோ னியா கிராம்ஷி குறிப்பிடுவார். அதன் அடிப்படையில் சமயங் களை பற்றி எழுதுகிறேன். மண் ணுக்கு ஏற்ற மார்க்சியத்தை நான் பேசவில்லை. ஆனால் மண்  சார்ந்த மார்க்சியம் இருக்க வேண்டும்” என்றார். “தமிழ் மண்ணின் சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு குறித்த குறை, நிறை, விமர்சனங்க ளோடு நேசிக்க வேண்டும். அப்  போதுதான் மக்களிடம் நெருங்க முடியும். எதிர்மறை அணுகு முறை இன்றி, உடன்மறை விமர்  சனத்துடன் எழுதுகிறேன். அது  பலன் தந்துள்ளது” என்றார். சம யம் குறித்து எழுதியுள்ள நூல் நளை தொகுத்து, ‘தமிழ்நாட்டில் சமய வரலாறு - புதிய பார்வை’  என்ற நூலை கொண்டு வர உள்  ளதாகவும், முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் வரலாற்றை ஆங்கி லத்தில் எழுதி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமுஎகச மாநில துணைத் தலைவர் மயிலை பாலு வர வேற்க, செந்துறை தமிழ்ச் சங்  கத்தின் செயலாளரும், நூல்  தொகுப்பாளருமான வே.குமர வேல் அறிமுகவுரை நிகழ்த்தி னார். நாடகவியலாளர் பிரளயன், சந்தியா நடராஜன், கல்வியாளர்  பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ. நிகழ்வை ஒருங்கி ணைத்தார். மாநிலக்குழு உறுப்பி னர் ஃபாமிதா நன்றி கூறினார்.