tamilnadu

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவிடத்தில் தலைவர்கள் வீரவணக்கம்

சென்னை, மே 9- தொழிற்சங்கத் தலைவரும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான மறைந்த  தோழர் வி.பி.சிந்தன் 36ஆவது நினைவு தினத்தையொட்டி சிஐ டியு சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில்  ஓட்டேரியில் உள்ள அவரது நினை விடத்தில் செவ்வஞ்சலி செலுத்தப்பட்டது. திங்களன்று (மே 8) மாவட்டத் தலை வர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் பேர ணியாகச் சென்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்  பட்டது.சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், தோழர் வி.பி.சிந்தனின் அரசியல் மற்றும் தொழிற்சங்க ஆளுமைகளை நினைவுகூர்ந்து பேசினார்.  பின்னர் பெரம்பூரில் நடைபெற்ற கண் சிகிச்சை, பல் சிகிச்சை முகாமை சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் வி. குமார் துவக்கி வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி, மத்திய  சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநகர போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் தலைவர் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.