புதுச்சேரி, மே 12- உயர்கல்வியை தனியா ருக்கு தாரை வார்க்கும் ஏற்பாடு தான் நீட், க்யூட் தேர்வுகள் என்று புதுச்சேரி யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் பேசிய தலைவர்கள் குற்றம் சாட்டினர். மாணவர்களுக்கு எதி ரான நீட் தேர்வை உடனடி யாக ரத்து செய்ய வேண் டும்மத்திய பல்கலைக்கழ கங்களில் கியூட் என்ற பொது நுழைவுத் தேர்வை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக் கழகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி செயலாளர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந் தன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செய லாளர் ஆர். ராஜாங்கம், வெ.பெருமாள், அனைத்து இந்திய தலித் தேசிய தலை வர் ராமமூர்த்தி, தலித் மக்கள் பாதுகாப்பு இயக் கத்தின் தலைவர் பிரகாஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர்கள் முத்துக்குமரன், சங்கரன் (விழுப்புரம்) வாஞ்சிநாதன், சுப்புராயன் (கடலூர்), ப.சு.பாரதிஅண்ணா, வாசுதேவன் (செங்கற்பட்டு), புதுச்சேரி நிர்வாகிகள் வீர. அரிகிருஷ்ணன், சரவணன், ரமேஷ் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் பிரவீன், அனைத் திந்திய மாணவர் பெரு மன்றம் தலைவர் எழிலன் உள்ளிட்ட பல்வேறு இயக் கங்களின் சேர்ந்த நிர்வாகி கள் இதில் கலந்து கொண்ட னர்.
டித்து வைத்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை யின் நிர்வாகி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், மக்கள் தங்களிடம் இருக்கும் இறையாண் மையை வாக்குசீட்டு மூலம் மக்கள் பிரதிநிதிக்கு தருகின்றனர். அரசுக்கான இறையாண்மை மக்கள் மூலம் கிடைக்கிறது. மக்கள் விரும்புவதை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. ஆனால் பிரதமர் மோடியோ மக்கள் விருப்பத்துக்கு எதிராக உலக வர்த்தக அமைப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார். தேசிய கல்விக்கொள் கையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவில்லை. கொரோனா ஊரடங்கு உச்சத்தின்போது செய்தி யாளர் கூட்டத்தில்தான் அறிவித்தனர். தேசியக் கல்விக்கொள்கை வரைவு நகல் வெளியிட்டபோதே இது ஏழை ஏளிய மாணவர்க ளுக்கு எதிரானது என்று எச்சரித்தோம். மாநில அரசு அனைத்துக் குழந்தைக ளுக்கும் இலவசமாக கல்வி தந்தாலும் பிளஸ் 2 முடித்து மேல்படிப்புக்கு செல்லும் போது, எல்லாம் கட்டணப் படிப்பு தான். எனவே தான் இத்தகைய அநீதிக்கு எதிராக போராடுகிறோம். மாநிலத்தில் பிளஸ் 2 முடித்து விட்டால் கல்லூரி களில் சேரமுடியும். பட்டப்படிப்பு முடிந்தால் போட்டித்தேர்வு எழுதலாம்.
ஆனால் இப்போது ஒன்றிய அரசானது பிளஸ் 2 கல்வியை தகுதியாக கருதமுடியாது என்று கூறி மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கவும், பட்டப்படிப்பு படிக்கவும் க்யூட் தேர்வு எழுத வேண்டும் என்கிறது. ஏற்கெனவே மத்திய பல்கலைக்கழகத்தில் சேர தேர்வு இருந்தது. தற்போது பட்டப்படிப்புக்கே க்யூட் தேர்வு எழுத சொல்கி றார்கள். நீட், க்யூட் தேர்வுக ளில் தவறான கேள்வி களுக்கு மதிப்பெண் குறைக்கப்படுகிறது. உலகில் எந்த பகுதியி லாவது தவறான பதில் களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உள்ளதா? பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக் கான முழு அதிகாரம் ஒன்றிய அரசிடமில்லை, மாநில அரசிடம்தான் உள்ளது. ஒன்றிய அரசும் -மாநில அரசும் சமபங்காளி கள். ஒருவரது அதிகாரத்தை மற்றொருவர் எடுக்க முடியாது என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.