tamilnadu

வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்கு நீதிமன்றத்திலேயே அநீதி!

வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்கு நீதிமன்றத்திலேயே அநீதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை, ஜூலை 26 - வழக்கறிஞர் எஸ். வாஞ்சிநாத னுக்கு நீதிமன்றத்திலேயே அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச்  செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு: அரசியலமைப்புக்கு எதிரான ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.  சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்  பட்ட சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச்  சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்  பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின்போது எடுத்துக் கொள் ளும் உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். வாஞ்சிநாதன் உச்ச  நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். நீதிபதிகளின் தீர்ப்புகளில் ஐயப் பாடுகள் எழும்போது இவ்வாறு புகார்  கள் எழுப்பப்படுவது சட்டப்படியானது தான். அதுவும் நீதித்துறைக்குள்ளேயே விசாரிக்கப்பட வேண்டும் என்பதற் காக உச்சநீதிமன்றத்திற்கு வழக்கறி ஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பி யுள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பிய புகார் கசிந்தது எப்படி? ஆனால், இப்புகார் அதிமுக ஆட்சிக்  காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்  பட்ட வழக்கறிஞர் இராஜராஜன் என்பவ ரால் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது எவ்வாறு இவ ருக்கு கிடைக்கப் பெற்றது என்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய பதில் அளித்திட வேண்டும். ஏனெனில், புகார்  மனுவை உச்ச நீதிமன்றம் தவிர வேறு  எவருக்கும் அனுப்பவில்லை என்று புகார்தாரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 25.07.2025 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மது ரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி, வழக்கறிஞர் எஸ். வாஞ்சிநாதன் திடீரென விசார ணைக்கு அழைக்கப்பட்டதும், ஒரு நீதி பதியின் மீதான புகாரை, புகாருக்கு உள்ளான நீதிபதியே விசாரிப்பதும் இயற்கை நீதிக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! அதேபோல், புகார் அனுப்பிய வழக்கறிஞரை, விசாரணையின் போது,  திறந்த நீதிமன்றத்தில் “நீ ஒரு கோழை”  என்று குறிப்பிட்டதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதி பதிக்கு, நீதி கேட்டு புகார் அளித்த ஒரு  வழக்கறிஞரை குற்றவாளி போல் பாவிப்பதையும், நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுவதையும் ஏற்க முடியாது.  மேலும், ஆதாரங்களுடன் புகார் அனுப்பியுள்ளதாக புகார்தாரர் தெரி வித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கைகளை துவங்கிட வேண்டும் என்றும்  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பெ.சண்முகம் வலி யுறுத்தியுள்ளார்.