tamilnadu

img

செம்மலர் இலக்கிய ஏட்டை நிறுவியவருமான மறைந்த தோழர் கு.சின்னப்ப பாரதி

தமிழக அரசு 2021 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதினை தமிழகத்தின் மகத்தான எழுத்தாளரும், செம்மலர் இலக்கிய ஏட்டை நிறுவியவருமான மறைந்த தோழர் கு.சின்னப்ப பாரதி அவர்களுக்கு அறிவித்திருந்தது. மேலும், எழுத்தாளர்கள் கோணங்கி, இரா.கலியபெருமாள் ஆகியோருக்கும் இலக்கிய மாமணி விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் உள்பட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்ட ஆளுமைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூலை 18 தமிழ்நாடு நாள் அன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். இவ்விழாவில் தோழர் கு.சின்னப்ப பாரதி சார்பில் அவரது குடும்பத்தினரிடம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.