கொச்சி, ஜன. 3- லட்சத்தீவு ஆண்ட்ரோத் தீவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காலிகட் பல்கலைக் கழகத்தில் இருந்து மாற்றப்பட்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தோடு கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டு ள்ளது. நீண்ட காலமாக லட்சத்தீவு எம்.பி. யாகவும், மக்களவை துணை சபாநாயகராக வும் இருந்த எம்.பி.சயீத்தின் பெயர் நீக்கப் பட்டபோதிலும், காங்கிரஸ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இக்கல்லூரியை குடி யரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கடந்த வாரம் திறந்து வைத்தார். லட்சத்தீவில் இருந்து 10 முறை மக்க ளவையில் எம்.பி.யாக இருந்த பி.எம்.சயீத்தின் நினைவாக கல்லூரிக்கு பெயர் சூட்டப்பட்டது. பாஜக தலைவர் பிரபுல் கோடா படேல் தீவின் நிர்வாகியான பிறகு கல்லூரி களின் இணைப்பு கோழிக்கோட்டில் இருந்து நீக்கப்பட்டது. இது கேரளாவுடனான உறவு களை துண்டிப்பதன் ஒரு பகுதியாகும். சயீத்தின் பெயர் நீக்கப்பட்டபோதிலும் தலை வர்கள் எதிர்ப்பு இல்லாமல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆனால் தீவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆயிஷா சுல்தானா உட்பட பலர் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.