tamilnadu

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது குண்டாஸ்

கோவை, ஜன.18- கோவை வெள்ளலூர்  பகுதியில்  உள்ள தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்த இரு நபர்கள் கடந்த 8 ஆம் தேதி  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். கைது செய்யப்பட்ட அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவரும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில், இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. பொது ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

;