tamilnadu

img

பாரம்பரிய விவசாயக் கருவிகளைப் பாதுகாக்கும் குமரி மாவட்ட விவசாயி

பாரம்பரிய விவசாயக் கருவிகளைப் பாதுகாக்கும் குமரி மாவட்ட விவசாயி'

தமிழக மூதாதையர்களின் பாரம்பரிய விவசாயக் கருவி களைச் சேகரித்துப் பாதுகாத்து வரும் 72 வயது விவசாயி செண்பகசேகர பிள்ளை, இந்தக் கருவிகளுக்கு அரசு அங்கீகாரம் வேண்டும் என்று கோருகிறார். “தமிழர்கள் கற்கருவிகளில் தொடங்கி, இரும்புக் கருவிகள் வரை  படிப்படியாக வளர்ச்சி அடைந்தனர். தீயில் இரும்பை உருக்கி, சம்மட்டி யால் அடித்துக் கையால் கருவிகள் செய்தனர். அரிவாள், மண்வெட்டி, ஏர்  கலப்பை, நீர் இறைக்கும் குடுவை, பனை ஏறுபவர்களுக்கான அறு வாப் பெட்டி உள்ளிட்ட பல கருவிகள் உருவாக்கப்பட்டன. அன்றைய கண்டு பிடிப்புகளின் நவீன வடிவங்களே இன்றைய டிராக்டர், மோட்டார்கள்,” என்கிறார் செண்பகசேகர பிள்ளை. பட்டதாரியான இவர், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தையார் பயன்படுத்திய கருவிகளைப் பாதுகாத்து, மேலும் சேகரித்து வரு கிறார். தற்போது இவரிடம் குத்தூசி முதல் ஏர்கலப்பை வரை 105 பாரம்பரியக் கருவிகள் உள்ளன. “இந்தக் கருவிகளைக் கண்டு பிடிக்க நம் முன்னோர்கள் பட்ட கஷ்ட மும், அவற்றின் நீடித்த பயன்பாடும் என்னை வியக்க வைத்தன. இளைய தலைமுறையினர் நம் மூதாதையரின் திறமை, அறிவுக் கூர்மையை அறிய  வேண்டும் என்பதற்காகவே இவற்றைப் பாதுகாக்கிறேன்,” என்று கூறுகிறார். இதுவரை பல்வேறு விவசாயக் கண்காட்சிகளில் இந்தக் கருவிகளைக் காட்சிப்படுத்தியுள்ள இவருக்கு, குமரி மாவட்ட ஆட்சியர் ரூ.25,000 பரிசும்,  2023-ல் திருச்சியில் நடந்த கண்காட்சி யை முதல்வர் திறந்து வைத்தபோது பாராட்டுச் சான்றிதழும், சென்னை யுவ ராஜ் காந்தி அறக்கட்டளையின் ‘மரபு காவலர்’ பட்டமும் கிடைத்துள்ளன. மரக்கால், பட்டம், நாழி, உழக்கு, ஆழாக்கு உள்ளிட்ட அளவீட்டுக் கரு விகள், மரம் சுத்தப்படுத்தும் கருவிகள், பத்தல் செருப்பு, வெற்றிலைப் பெட்டி,  ஏற்றம் என 105 வகையான கருவிகள் இவரிடம் உள்ளன. “விலைமதிப்பில்லாத இந்தப் பாரம்பரியக் கருவிகளை அரசு விழாக்களில் காட்சிப்படுத்த அனு மதி வேண்டும். தமிழகம் முழுவதும் செயல்பாடற்று கிடக்கும் பாரம்பரி யக் கருவிகளைச் சேகரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும். என் மறை வுக்குப் பின்னரும் இவை பாதுகாக்கப் பட்டு, வருங்கால சந்ததியினருக்குப் பாரம்பரியம் தெரிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்தக் கருவி களைப் பாதுகாப்பதற்கான அரசு அங்கீ காரம் அவசியம்,” என்று வலியுறுத்து கிறார் செண்பகசேகர பிள்ளை. - ஜி. மாணிக்கராஜ்