tamilnadu

img

கொரடாச்சேரி புதிய ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோக கட்டிடங்கள் திறப்பு

கொரடாச்சேரி புதிய ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோக கட்டிடங்கள் திறப்பு

திருவாரூர், ஜுன் 13-  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியங்களில் ரூ.2 கோடியே 52 இலட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோக கடை கட்டிடங்கள், உடற்பயிற்சி கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் திறந்து வைத்தனர்.  அதனைத்தொடர்ந்து கொரடாச்சேரி ஒன்றியம் திருமதிக்குன்னம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குநர் மரு.ரிச்சர்ட்டுராஜ், இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் சித்ரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையில் கணபதி அக்ரஹாரம் காவிரி ஆற்றின் மீது, பாலம் புதிதாகக் கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், பாத சாரிகள் சிரமப்பட நேரிடுகிறது. எனவே,  காவிரி பாலத்தில் மின் விளக்குகளை பொருத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.