கள்ளக்குறிச்சி,மார்ச் 28- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழாவில் 16 ஆம் நாள் அழுகளம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த விழாவுக்காக மும்பை, கொல்கத்தா, தில்லி, புனே, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயி ரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வருவர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இவ்விழா நடைபெறவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்பு, ஏப்.5 முதல் கூத்தாண்டவர் கோயில் திருவிழா தொடங்கி 18 நாட்கள் நடைபெற உள்ளது. ஏப்.18-இல் முக்கிய விழாவான தாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, 19-இல் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் குறித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஆலோ சனைக் கூட்டம் நடத்தினார்.