கொல்லம், நவ.28- கேரளத்தை நடுங்க வைத்த குழந்தை கடத்தல் 20 மணிநேர காத்திருப்பு மற்றும் தேடுதலின் முடி வாக 6 வயது சிறுமி அபிகாயில் சாரா கொல்லத்தில் இருந்து மீட்கப் பட்டுள்ளார். கொல்லம் ஆசிரம மைதா னத்தில் கைவிடப்பட்ட நிலையில் சிறுமி மீட்கப்பட்டார். கொல்லம் மாவட்டம் ஓயூர் பூயப்பள்ளி மருத மான்பள்ளியை சேர்ந்த ராஜியின் மகள் அபிகாயில் (6). திங்களன்று (நவ.27) தனது சகோதரன் ஜோனதனுடன் டியூஷன் சென்று கொண்டிருந்த அபிகாயிலை ஒரு கும்பல் காரில் கடத்திச்சென்றது. சிறுமியை காரில் கடத்திய கும்பலில் ஒரு பெண் உட்பட நால்வர் இருந்த தாக சிறுமியின் சகோதரன் ஜோனதன் தெரிவித்தார். பின்னால் வந்த காரில் இருந்த வர்கள் இருவரையும் பிடிக்க முயன்ற னர். முதலில் அந்த சிறுமியைப் பிடித்து காரில் ஏற்றினர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்த அண்ணன் ஜோன தன் கீழே விழுந்து காயம் அடைந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார் வேகமாக சென்று விட்டது. பின்னர் பூயப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அந்த நிமிடத்தில் இருந்து தொடங்கிய காவல்துறையினரின் தேடுதல் 20 மணி நேரத்தில் வெற்றி யில் முடிந்தது. குழந்தையை கடத்திய கும்பல் குழந்தையை கொல்லம் ஆசி ரம மைதானத்தில் விட்டுவிட்டு தலை மறைவானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடத்தல்காரர்களை தேடும் பணி நடந்து வருகிறது.