ஒட்டாவா, அக்.19- காலிஸ்தான் பிரி வினைவாதிகளான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், குர்பத்வந்த் சிங் பன்னூன் ஆகியோர் படுகொலை செய்யப் பட்ட வழக்கில், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்தியா மீது பழி போட்டுள்ள நிலையில், கனடாவிலுள்ள காலிஸ்தான் ஆதர வாளர்களும் இந்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். கனடாவில் உள்ள அனைத்து இந்திய துணைத் தூத ரகங்களையும் மூட வேண்டும் என கனடாவின் வான்கூவர் நகரிலுள்ள இந்தியத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்திய அவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் பொம்மை யை உதைத்தும், இந்தியக் கொடிகளை கத்தியை வைத்து கிழித்தும், பந்து போல சுருட்டி உதைத்தும் அவமதித் துள்ளனர்.