tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர் மாநாடு துவங்கியது

திருவாரூர், ஜுன் 10- தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) 9-வது  மாநில மாநாடு திருவாரூரில் வெள்ளிக்கிழமை மாலை  காக்கிச்சட்டைப் பேரணியோடு தொடங்கியது. 5000க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்து பேரணியில் பங்கேற்றனர்.  கிராமியக் கலைகளோடு  திருவாரூர் புலிவலம் கடைவீதி யிலிருந்து மாவட்ட துணை தலைவர் ஜி.பழனிவேல் தலைமையில் புறப்பட்ட பேரணி தெற்கு வீதியில் நிறை வடைந்தது. தெற்கு வீதியில் தோழர்.டிஎன்.நம்பிராஜன் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் வி.குமார் தலைமையேற்றார். சிஐடியு மாநிலத் தலைவர்  அ.சவுந்தரராசன், மாநில செயலாளர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.மோகன், சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி மற்றும் பலர் உரையாற்றினர். ஜூன்-11 சனிக்கிழமை (இன்று) தெற்கு வீதியில் தோழர்கள் வி.அழகப்பன், டி.கே.சுகு மாறன் நினைவரங்கில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறு கிறது.