tamilnadu

img

தொழில் வள பூமியாகிறது கேரளம் - பி. ராஜீவ்

முன்னேறிய நாடுகளின் மாதிரியில் கொச்சி நகரத்தில் சர்வதேச தரத்திலுள்ள ஒரு கண்காட்சி அரங்குடன் கூடிய வர்த்தக மையமும் கருத்தரங்கங்கள் நடத்தும் விதத்திலான உள்ளரங்கமும் உருவாக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தொழில் துறையின் பெருமைக்குரிய திட்டமாகவே இத்திட்டம் உருவாகி வருகிறது. கேரளத்தில் உள்ள தொழில் துறைக்கும், பாரம்பரிய தொழில் மற்றும் விவசாயத் துறையினருக்கும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இந்தக் கண்காட்சி வசதியுடன் கூடிய வர்த்தக மையம் உதவும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. தொழில் துறையினருக்கும் மற்ற துறையிலுள்ளவர்களுக்கும் பயனுள்ள முறையில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யவும் சர்வதேச சந்தைகள் உட்பட வியாபார ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும் ஏற்படுத்தப்படும் இந்த வர்த்தக மையத்திற்கு கொச்சியில் 15 ஏக்கர் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவு ஆகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சி மற்றும் வர்த்தக மையத்தின் கட்டுமானப்பணிகள் உடனடியாக துவங்கயிருக்கிறது. இந்த வர்த்தக மையம் நனவாகும் வேளையில் கேரளத்தில் உள்ள வெவ்வேறு தொழில் துறையினரை உட்படுத்தி கண்காட்சியும் வர்த்தகக் கொண்டாட்டங்களையும் நடத்தும் விதத்தில் ஒரு வருடாந்திர நாட்காட்டியையும் தயார் செய்ய இயலும். இந்திய வர்த்தக முன்னேற்றக் கழகத்தின் புதுடெல்லியில் கண்காட்சி மற்றும் வியாபார மையத்தின் மாதிரியில் தான் இந்த மையத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் துறை வடக்குக் கேரளத்தில் தொழில் வளர்ச்சிக்காக கோழிக்கோட்டில் கே.எஸ்.ஐ.டி.சி-யின்  புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. சேர்த்தலையில் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவப்பட்டுள்ளது. கின்ஃப்ரா அமைப்பின் மூலம் கொல்லம் முண்டக்கலில் சிறு தொழிற்பூங்கா நிறைவு பெற்றுள்ளது.  கின்ஃப்ராமூலம் மல்;அப்புறம் மாவட்டத்தில் டெக்னோ இன்டஸ்டிரியல் பூங்காவில் ஸ்டேன்டர்ட் டிசைன் ஆளை செயல்பட ஆரம்பித்தது. மட்டன்னூர் கின்ஃப்ரா பூங்காவில் அட்மினிஸ்ட்ரேஷன் கம் பெசிலிட்டேஷன் கட்டிடம் உருவாக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.  கச்சா முந்திரி இறக்குமதி செய்து காப்பெக்ஸ் மற்றும் முந்திரி கழகத்திற்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஏரளாமான முந்திரி ஆலைகள் திறக்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளது.

முந்திரி கழகம் மூலம் 8000 மெட்ரிக் டன் கச்சா முந்திரி இறக்குமதி செய்யப்பட்டு அத்துறையில் ஒட்டுமொத்தமாக  100 வேலைநாட்கள் உருவாக்க முடிந்தது. மதிப்புக் கூட்டலின் பகுதியாக ஹான்டெக்ஸ் கார்மென்ட் ஆலை நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் பொருட்களில் 30 சதவீதம் கைத்தறி அல்லது காதியாகத்தான் இருக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  புதன்கிழமைகளில் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய வேண்டுமென்று விதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2020 –ல் 8 கோடி ரூபாய் நஷ்டத்திலிருந்த டெக்ஸ்டைல்ஸ் கழகம் தற்போது தனது நஷ்டத்தை 83 ஆயிரமாகக் குறைத்துள்ளது.  சுற்றுலாத் தலங்களை மையப்படுத்தி கைவினைப் பொருட்களின் சந்தையை உருவாக்குவதன் பகுதியாக குமரகத்தில் மூங்கில் பஜார் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பஜார்களை மூணார், தேக்கடி, மானந்தவாடி, கோதமங்கலம் முதலிய இடங்களில் துவங்குவதற்கான பணிகள் நடந்துவருகிறது. மாநிலத்தில் தோட்டப் பகுதிகளை தொழில் துறையின் கொண்டுவரப்பட்டு, தோட்டக்கலை இயக்குனரகம் இரண்டு பகுதிகளில் அலுவலகங்களும் துவங்கும் பணிகள் நடந்து வருகின்றன. கனிமவளத்துறை தொடர்பான முழு அலுவல்களும் முற்றிலுமாக இணைய சேவை மூலமாக நடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லா அனுமதிகளும் இணையம் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட அனுமதிகள் முழுவதும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெருவேள்ளத்திற்குப் பிறகு வருடம் ஒன்றுக்கு 45 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  காலாவதியான 105 சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தயார் செய்யப்பட்டது. இது போக 122 சட்டங்களை ரத்து செய்வதற்கான பரிந்துரைகளையும் அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. நீதிமன்றங்களில் மலையாள மொழியை ஆட்சி மொழியாக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. இ-ஆபிஸ் முறையிலான சேவையை நீதித்துறையிலும் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.  மீட் த இன்வெஸ்டர் என்னும் முதலீட்டாளர் சந்திப்புகள் மூலம் 7000 கோடி ரூபாயின் முதலீட்டு உத்தரவாதம் கிடைத்துள்ளது. கேரளத்தில் 100 –க்கு அதிகமான முதலீட்டைச் செய்ய முன்வரும் முதலீட்டாளர்களை சந்தித்து,

அது  தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஒரு தனி அதிகாரியை நியமித்து பணிகள் நடந்து வருகின்றன.  தொழில்துறையினர் எழுப்பும் பிரச்சனைகளையும் புகார்களையும் தீர்வுக்குக் கொண்டுவர மாநில-மாவட்ட அளவில் சட்டப் பின்புலத்துடன் இயங்கும் பிரச்சனை தீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கோவிட் நோய் காரணமாக இக்கட்டில் மாட்டிக்கொண்ட நுண், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு உதவும் நோக்கில் 1416 கோடி ரூபாயின் உதவித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 4700  நுண், சிறு, குறு தொழில்கள் துவங்கப்பட்டதன் மூலம்    673.49 கோடி ரூபாயின் முதலீடும்  23,332 பேருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது.  50 கோடிக்கு அதிகமான முதலீட்டில் துவங்கப்படும் தொழில்களுக்கு, முறையான சான்றுகளுடன் விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்குவதற்கான முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டது.  முறைகேடுகளைத் தவிர்க்கவும் தொழில் முதலீட்டாளர்களுக்கெதிராக ஏதாவது ஒரு அலுவலர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்ளுவதைத் தவிர்க்கவும் 5 பல்வேறு துறைகளை இணைத்து தொழில் நிறுவனங்களில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலவில் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மாவட்டங்கள் தோறும் மீட் த மினிஸ்டர் என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கழக்கூட்டத்தில் கின்ஃப்ரா பூங்காவில் 75 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு வடிவமைப்புத் தொழில்நுட்பப் பிரிவில் உலகத்தரம் வாய்ந்த டாடா எலக்சி நிருவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 வருட காலத்தில் 6 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும்.  காக்கநாடு கின்ஃப்ரா எலக்ராட்னிக் அன்ட் மேனுஃபேக்ச்சரிங் கிளஸ்டரில் தகவல் தொழில் நுட்பம், மின்னணுவியல் போன்ற துறைகள் ஆரம்பிக்க டிசிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1200 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 20000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  வி-கார்ட் நிறுவனத்தின் மின்னணு ஆய்வகம், பரிசோதனைக்கூடம் போன்றவை துவங்க கின்ஃப்ராவின் இ.எம்.சி ஆய்வக வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 120 கோடி ரூபாயின் முதலீட்டில் 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கொச்சி-பெங்களூர் தொழில் தாழ்வாரம் அமைக்க 2220 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் மணி நடந்து வருகிறது. பாலக்காட்டில் கையகப்படுத்தப் பட்ட 17.3 ஏக்கர் நிலம் உட்பட பாலக்காடு, எர்ணாகுளம் முதலிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும்  பணிகள் நடந்து வருகிறது. 2030 -க்குள் 41 பொதுத்துறை நிறுவனங்களை புதுபித்து நவீன மயப்படுத்தும் நோக்கில் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பாக செயப்படும் நிறுவனம், நிர்வாக இயக்குனர், சிறந்த தொழிலாளி, சிறந்த அலுவலர் முதலான பிரிவுகளில் விருதுகள் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரப்பரை மூலப்பொருளாகக் கொண்டு தயாராகும் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில் கேரள ரப்பர் லிமிடட் வெள்ளூரில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொச்சி ஸியால் மாதிரியில் தான் இந்த நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒன்றரை வருடமாக கதவடைப்பு நிலையில் கிடந்த கோட்டயம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டு உற்பத்தியைத் துவங்கியுள்ளது. வெவ்வேறு தொழிற்பேட்டைகள் மற்றும் தொழிற்பூங்காக்கள் ஆகியவற்றின் நிலங்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை கணிணி மயப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

   தமிழாக்கம்: கே.சதாசிவன்