tamilnadu

img

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்

மதுரையில்  எழுத்தாளர்கள் முழக்கம்

மதுரை, ஜூன் 12- ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி உடனே வெளி யிட வேண்டும் என்று வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கம் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தியது. திராவிட நாகரிகத்தின்  அடையாளப் போராட்டம் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் போராட்டத்தில் முக்கிய உரையாற்றினார். “இது பாஜகவுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான போராட்டம் இல்லை. இது திராவிட நாகரிகத்தின் அடையாளப் போராட்டம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் நடந்துவரும் உண்மை மற்றும் அறிவியலின் போராட்டம்” என்று அவர் தெரிவித்தார். கீழடி தமிழர்களின் எழுத்தறிவு, நகர வளர்ச்சி, நாகரிக முன்னேற்றத்தைக் கூறும் அதீத முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாக மாறியுள்ளது என்று சாந்தலிங்கம் வலியுறுத்தினார். இந்நிலையில் ஒன்றிய அரசு நியமித்த ஆய்வாளர்கள் “அதிகம் எதுவும் தெரிய வில்லை” என்று கூறியதை அவர் கண்டித்தார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்லாயிரக்கணக் கான தொல்பொருட்களை கண்டுபிடித்து, அவற்றை உலகளாவிய ஆய்வகங்களுக்கு அனுப்பி, அறிவியல் அடிப்படையில் தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற நாகரிகமாக இருந்தார்கள் என்பதை நிரூபித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆதிச்சநல்லூர் முதல் சிவகளை வரை ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கி.மு. 900க்கும் முந்தைய நாகரிகம் இருந்ததைக் கூறும் அறிக்கைகள் கூட ஒன்றிய அரசால் வெளியிடப்படவில்லை என்று சாந்தலிங்கம் சுட்டிக்காட்டினார். சிவகளை (திருநெல்வேலி) பகுதியில் தமிழ்நாட்டில் கி.மு. 3500க்கே நாகரிக அடையாளங்கள் இருந்ததாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறினார். இந்தப் புரட்சிகரமான தகவல்களை தமிழ்நாடு அரசு உலகளாவிய அறிஞர்களிடம் பகிர்ந்திருக்கிறது. திலீப் சக்கரவர்த்தி போன்ற இந்திய தொல்லியல் துறையின் முன்னணி அறிஞர்கள் கூட, தமிழர்கள் மிகப்பழமையான நாகரிகத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை தெளிவாக ஒப்புக்கொள்கிறார்கள் என்றார். “அறியாமை தவறு அல்ல. ஆனால் மறுப்பு தவறு” என்று அவர் தெரிவித்தார். இந்த உண்மைகளைத் தக்கவைத்து, உலகம் முழுவதும் தமிழர்களின் அறிவு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை எடுத்துச் செல்லும் பொறுப்பில் நாம் இருக்கிறோம் என்றார். அருணன் கண்டிப்பு எழுத்தாளர் அருணன் பேசுகையில், கீழடி அகழாய்வின் சான்றுகளை நிராகரிக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக கண்டித்தார்.  “சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட வாழ்வு முறையை கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் நிரூபிக்கின்றன. இது கற்பனை அல்ல, மெய்யான நகர வாழ்வு” என்று அருணன் வலியுறுத்தினார். தமிழர்களின் தொன்மையான நாகரிகத்திற்கு கிமு 2600 ஆண்டுகளுக்கு முன்பான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், அதை ஏற்க மறுப்பது ஆரிய மேலாதிக்கவாதம் என்றார். வரலாற்றுப் பார்வை மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கீழடி அகழாய்வின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார்.  தமிழாசிரியர் பாலசுப்ரமணியம் கீழடியை முதன்முதலாக உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர் என்றும், அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் போன்றவர்கள் இதை பொதுவெளிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியுள்ளனர் என்றும் தெரிவித்தார். “வைகை தொடங்கும் மூல வைகையில் இருந்து முடிகின்ற ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் வரை 800 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பியுள் ளோம். ஆனால் பல இடங்கள் ரியல் எஸ்டேட் நபர்களால் விற்கப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன” என்று அவர் கவலை தெரிவித்தார். “50 ஆண்டுகள் பழமையான தென்னை மரம் தான் 2500 ஆண்டுகால வரலாற்றை பாதுகாத்து இருக்கிறது. சிவகளையில் கிடைத்த ஒரு நெல்மணியின் வயது 2400 ஆண்டுகள் என்று அமெரிக்க ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு நெல்லுக்கு வயது 2400 என்றால், தமிழர்கள் பேசும் சொல்லுக்கு எவ்வளவு வயது என்பதை இன்று நாம் எழுப்புகிறோம்” என்று மதுக்கூர் ராமலிங்கம் வலியுறுத்தினார். எதிர்பார்ப்பு மாநில துணைப் பொதுச்செயலாளர் வேலாயுதம் பேசுகையில், கீழடி ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் ஒப்பானவை என்று தெரிவித்தார். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வு அறிக்கையை இந்திய அரசு வெளியிட வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து அறிஞர்களின் எதிர்பார்ப்பு என்றார்.