tamilnadu

img

கட்டபொம்மன் விழா: அரசு சார்பில் மரியாதை!

தூத்துக்குடி, மே 12 தூத்துக்குடி மாவட்டம், பாஞ் சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீர பாண்டிய கட்டபொம்மன் கோட்டை யில் சுதந்திர போராட்ட வீரர் வீர பாண்டிய கட்டபொம்மன் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் வெள்ளியன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  மேலும், வீரபாண்டிய கட்ட பொம்மன் வாரிசுதாரர் வீமராஜா என்ற ஜெக வீரபாண்டிய கட்ட பொம்மன் துரைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவரது இல்லத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி கெளர வித்தார். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.