கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம்
கரூர், அக். 21- கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் இந்துமதி அரவிந்த் பேசுகையில், “நகராட்சிக்குச் சொந்தமான காந்தி திருமண மண்டபத்தின் வாடகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது ஏற்புடையதல்ல. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையே நிர்ணயிக்கப்பட வேண்டும். மண்டபத்தின் பராமரிப்பினை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு நகராட்சி நிர்வாகம் நடத்திட வேண்டும்’’ என்பன உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
