tamilnadu

img

சீர்காழி குட் சமரிட்டன் பப்ளிக் பள்ளியில் கராத்தே பெல்ட் தேர்வு

சீர்காழி குட் சமரிட்டன் பப்ளிக் பள்ளியில்  கராத்தே பெல்ட் தேர்வு    

மயிலாடுதுறை, ஏப்3-  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சமரிட்டன் பப்ளிக் பள்ளியில் ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், கராத்தே பெல்ட் தேர்வு நடைபெற்றது.  தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சீர்காழி நிலைய அதிகாரி  ரத்தினவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கினார். ஜென் கராத்தே ஸ்கூல் ஆஃப் இந்தியா நிறுவனர் சென்சாய் கார்த்திகேயன் முதன்மை மதிப்பீட்டாளராக செயல்பட்டார். செயற்கை நுண்ணறிவு பொறியாளர் ஸ்வர்ணதர்ஷினி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். தரங்கம்பாடியைச் சேர்ந்த தீக்சன், ஒட்டுமொத்த முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவனையும், குட் சமரிட்டன் பப்ளிக் பள்ளியின் இயக்குனர் பிரவீன் வசந்த் ஜெபஸ், சிறப்பு விருந்தினர் ரத்தினவேல், முதன்மை மதிப்பீட்டாளர் சென்சாய் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். இத்தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.