tamilnadu

img

ஆர்எஸ்எஸ் - பாஜக வெறுப்பு அரசியலுக்கு எதிராக கரங்கோர்த்த தலைவர்கள்

ஆர்எஸ்எஸ் - பாஜகவின் வெறுப்பு அரசியலைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்களன்று கண்டனக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். திமுக துணைப் பொதுச்செயலாளர் க. கனிமொழி எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., ஐயுஎம்எல் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மமக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொமதேக தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ, தவாக தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.