tamilnadu

img

குமரி அனந்தனுக்கு ‘காமராஜர் விருது’அறிவிப்பு

சென்னை,ஜன.15- தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் அய்யன் திருவள்ளுவர் விருதும், பெருந்தலைவர் காமராஜர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது மு. மீனாட்சி சுந்தரத்துக்கும்,  2021 ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது முனைவர் குமரி அனந்தனுக்கும் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம் பணமும், 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  விருது பெறுபவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பதற்கு காரணமாக இருந்தவர் மு.மீனாட்சி சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.