tamilnadu

img

சிபிஎம் கண்ணூர் மாவட்டச் செயலாளராக கே.கே. ராகேஷ் தேர்வு!

சிபிஎம் கண்ணூர் மாவட்டச்  செயலாளராக கே.கே. ராகேஷ் தேர்வு!

கண்ணூர், ஏப்.15- மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலாளராக கே.கே.ராகேஷ் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதற்கு முன்பு, கண்ணூர் மாவட்டச் செயலாளராக இருந்த எம்.வி. ஜெயராஜன், கட்சியின் மாநில செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், புதிய மாவட்டச் செயலாளர் தேர்வு நடைபெற்றது.  கே.கே. ராகேஷ், எம். சுரேந்திரன், காரை  ராஜன், டி.கே. கோவிந்தன், பி.வி. கோபி நாத், பி. ஹரீந்திரன், பி. புருஷோத்தமன், டி.ஐ. மதுசூதனன், என். சுகன்யா, கே.வி.  சுமேஷ், சி. சத்தியபாலன், எம். கருணாகரன்  ஆகிய 12 பேர் கொண்ட மாவட்டச் செயற்  குழு கூட்டத்தில், மாவட்டச் செயலாளராக கே.கே.ராகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன், மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், மத்தியக்குழு உறுப்பி னர்கள் இ.பி. ஜெயராஜன், கே.கே. ஷைலஜா, எம்.வி. ஜெயராஜன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எம். பிரகாஷ் தலைமை தாங்கினார். சிபிஎம் கேரள மாநிலக்குழு உறுப்பின ரான ராகேஷ், முதலமைச்சர் பினராயி விஜ யனின் தனிச் செயலாளராக இருந்தார்.  மேலும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான ராகேஷ், கண்ணூரில் உள்ள  காஞ்சிரோட்டைச் சேர்ந்தவர். 2021-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, ராகேஷுக்கு ‘பிரைம்  பாயிண்ட் அறக்கட்டளை’யால் சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டது. சட்டப் பட்டதாரியான ராகேஷ், அகில  இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில  இந்திய இணைச் செயலாளராக உள்ளார்.  தில்லியில் நடந்த விவசாயிகள் போராட் டத்தில் அவர் ஒரு முன்னணிப் போராளி யாக இருந்தார். இ்ந்திய மாணவர் சங்கத் தின் அகில இந்தியத் தலைவராகவும் பொதுச்  செயலாளராகவும் பணியாற்றினார்.